புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 082

ஊசி வேகமும் போர் வேகமும்!


ஊசி வேகமும் போர் வேகமும்!

பாடியவர் :

  சாத்தந்தையார்.

பாடப்பட்டோன் :

  சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி.

திணை :

  வாகை.

துறை :

  அரசவாகை.

சாறுதலைக் கொண்டெனப், பெண்ணீற்றுற்றெனப்
பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக்,
கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ;
ஊர்கொள வந்த பொருநனொடு, . . . . [05]

ஆர்புனை தெரியல் நெடுந்தகை போரே!

பொருளுரை:

ஊரைக் கைப்பற்ற வந்த போராளியோடு ஆத்திமாலை சூடிக்கொண்டு கிள்ளி போரிட்டான். அப்போது அவன் கை விரைந்து செயல்பட்டது. ஊரில் திருவிழா. மனைவி மகனைப் பெற்றுக்கொண்டிருக்கிறாள். மழை பொழிந்துகொண்டிருக்கிறது. பொழுது இறங்கி இருண்டுகொண்டிருக்கிறது. இந்தப் பரபரப்பான சூழலில் மனைவிக்காகக் கட்டில் பின்னுபவன் கை விரைந்து செயல்படுவது போல, கிள்ளியின் கை போரில் செயல்பட்டது.