புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 193

ஒக்கல் வாழ்க்கை!


ஒக்கல் வாழ்க்கை!

பாடியவர் :

  ஓரேருழவர்.

திணை :

  பொதுவியல்.

துறை :

  பொருண்மொழிக் காஞ்சி.

அதள்எறிந் தன்ன நெடுவெண் களரின்
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல,
ஓடி உய்தலும் கூடும்மன்;
ஒக்கல் வாழ்க்கை தட்கும்மா காலே.

பொருளுரை:

அந்தனருடன் வாழும் இல்லற வாழ்க்கையானது வேட்டைக்காரன் களர்நிலத்தில் துரத்தும் மான் படும் துன்பம் போல இடர்ப்பாடு உடையதுதான். என்றாலும் அதிலிருந்து அவன் தப்பமுடியாது. அதள் = தோல்பறை எறிதல் = அடித்தல் களர்நிலம். நீண்ட களர்நிலம். வெண்ணிறக் களர்நிலம். களர்நிலம் என்பது நேற்றுநிலம். அந்த நிலத்தில் வேடன் ஒருவன் புல்லுண்ணும் புல்வாய் மானை வேட்டையாடத் துரத்துகிறான். அந்த மான் அவனிடமிருந்து தப்பிப் பிழைக்கவும் முடியும். இதனை ஒருவன் என்னிப் பார்க்கிறான். தட்குதல் = தளையாய் அமைதல் அவனுக்கு மான் களரில் ஓடுவது போன்ற துன்பம். ஒக்கல் வாழ்க்கையால் துன்பம். மனைவி, மக்கள் போன்ற ஒக்கல் வாழ்க்கையால் துன்பம். அவனால் தப்பிப் பிழைக்க முடியவில்லை. ஒக்கல் - வாழ்க்கை அவனுக்குத் தளை. துன்பப் பட்டேனும் அவர்களைக் காப்பாற்றியே ஆகவேண்டும். இதுதான் வாழ்க்கை. மாட்டைத் தளைக்கயிற்றில் கட்டி வைத்திருப்பர். தளைதல் = கட்டுதல் பாடலில் இரண்டு சீர்களைக் கட்டிப்போடுதல் தளை. மனைவி மக்களைது துன்பப்பட விட்டுவிட்டுத் துறவு பூணுதல் கூடாது என்கிறது, இந்தப் பாடல்.