புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 174

அவலம் தீரத் தோன்றினாய்!


அவலம் தீரத் தோன்றினாய்!

பாடியவர் :

  மாறோக்கத்து நப்பசலையார்.

பாடப்பட்டோன் :

  மலையமான் சோழிய வேனாதி திருக்கண்ணன்.

திணை :

  வாகை.

துறை :

  அரச வாகை.

அணங்குடை அவுணர் கணம்கொண்டுஒளித்தெனச்,
சேண்விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது,
இருள்கண் கெடுத்த பருதி ஞாலத்து
இடும்பைகொள் பருவரல் தீரக், கடுந்திறல்
அஞ்சன் உருவன் தந்து நிறுத்தாங்கு, . . . . [05]

அர சிழந்து இருந்த அல்லற் காலை,
முரசுஎழுந்து இரங்கும் முற்றமொடு, கரைபொருது
இரங்குபுனல் நெரிதரு மிகுபெருங் காவிரி
மல்லல் நன்னாட்டு அல்லல் தீரப்,
பொய்யா நாவிற் கபிலன் பாடிய, . . . . [10]

மையணி நெடுவரை ஆங்கண் ஒய்யெனச்
செருப்புகல் மறவர் செல்புறம் கண்ட
எள்ளறு சிறப்பின் முள்ளூர் மீமிசை,
அருவழி இருந்த பெருவிறல் வளவன்
மதிமருள் வெண்குடை காட்டி, அக்குடை . . . . [15]

புதுமையின் நிறுத்த புகழ்மேம் படுந!
விடர்ப்புலி பொறித்த கோட்டைச், சுடர்ப் பூண்,
சுரும்பார் கண்ணிப், பெரும்பெயர் நும்முன்
ஈண்டுச்செய் நல்வினை யாண்டுச்சென்று உணீஇயர்,
உயர்ந்தோர் உலகத்துப் பெயர்ந்தனன் ஆகலின், . . . . [20]

ஆறுகொள் மருங்கின் மாதிரம் துழவும்
கவலை நெஞ்சத்து அவலந் தீர
நீதோன் றினையே - நிரைத்தார் அண்ணல்!
கல்கண் பொடியக், கானம் வெம்ப
மல்குநீர் வரைப்பில் கயம்பல உணங்கக், . . . . [25]

கோடை நீடிய பைதறு காலை,
இருநிலம் நெளிய ஈண்டி,
உரும்உரறு கருவிய மழைபொழிந் தாங்கே!

பொருளுரை:

அஞ்சண உருவன் - மை நிறம் கொண்ட திருமால். அவுணர் கணம் - அச்சம் தரும் கூட்டம். கபிலன் - பொய்யா நாவினை உடையவன். முள்ளூர் மலையைப் பாடியவன். (புறநானூறு 168, பதிற்றுப்பத்து 85 பாடல்களில் பாராட்டப்பட்டுள்ளவன்) காவிரி மல்லல் நன்னாடு - காவிரியாற்றுப் புனல் கரைபுரண்டு ஓடி ஒலியுடன் முற்றத்தில் பாயும் வளம் மிக்க நாடு. கோடை - கல் பொடியும் காலம். காடு வெம்பியிருந்த காலம். குளம் நீரற்றுப்போயிருந்த காலம். பசுமை அற்றுப்போயிருந்த காலம். ஞாயிறு, பருதி - தொலைவில் விளங்குவது. அனைத்திலும் பருமனானது பருதி. திருக்கிள்ளி - ‘பெரும்பெயர் முன்னோன்’ என இந்தப் பாடலில் குறிப்பிடப்படும் மலையமானுக்குப் பின்னர் முள்ளூரை ஆண்டவன். இந்த மலையமான் ‘பசும்பூண் சுருமு ஆர் கண்ணி’ சூடியவன். திருக்கிள்ளி ‘நிரைத்தார் அண்ணல்’ என்று சிறப்பிக்கப்பட்டுள்ளவன். முள்ளூர் - கபிலன் பாடிய மலையினைக் கொண்டது. போரை விரும்பும் மறவர்களைக் கொண்டது. புலி பொறித்த கோட்டையினை உடையது. வளவன் - வழி தெரியாமல் அருவழியில் இருந்தான். இவன் குடை புதிய உத்திமுறையில் இந்தத் திருக்கண்ணனால் நிலைநிறுத்தப்பட்டது.