புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 154

இரத்தல் அரிது! பாடல் எளிது!


இரத்தல் அரிது! பாடல் எளிது!

பாடியவர் :

  மோசிகீரனார்.

பாடப்பட்டோன் :

  கொண்கானங் கிழான்.

திணை :

  பாடாண்.

துறை :

  பரிசில் துறை.

திரைபொரு முந்நீர்க் கரைநணிச் செலினும்,
அறியுநர்க் காணின், வேட்கை நீக்கும்
சின்னீர் வினவுவர், மாந்தர்: அதுபோல்,
அரசர் உழைய ராகவும், புரைதபு
வள்ளியோர்ப் படர்குவர், புலவர்; அதனால், . . . . [05]

'யானும், 'பெற்றது ஊதியம்; பேறியாது?' என்னேன்;
உற்றனென் ஆதலின் உள்ளிவந் தனனே;
'ஈயென இரத்தலோ அரிதே! நீ அது
நல்கினும், நல்காய் ஆயினும் வெல்போர்
எறிபடைக்கு ஓடா ஆண்மை, அறுவைத் . . . . [05]

தூவிரி கடுப்பத் துவன்றி மீமிசைத்
தண்பல இழிதரும் அருவி நின்
கொண்டு பெருங்கானம், பாடல் எனக்கு எளிதே.

பொருளுரை:

கொள் விளையும் கானம்(காடு) கொண்கானம். மிகுதியாகக் கொள் விளைவதால் அது ‘கொண்பெருங்கானம்’ எனப் பலராலும் பேசப்பட்டது. அதன் உரிமைக்காரன் கொண்கானங்கிழான். இந்த நாட்டில் அருவி வெள்ளைத்துணி போல் ஒழுகுமாம். கொண்கானங்கிழான் சிறந்த போராளி. பெரும்படையை எதிர்த்து நின்றவன். ‘கொண்கானங்கிழான் கொடை வழங்கினாலும் வழங்காவிட்டாலும், இவனுடைய நாட்டைப் புகழ்ந்து பாடிக்கொண்டே இருப்பேன்’ என்கிறார் புலவர்.