ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

ஐங்குறுநூறு: 10

மருதம் - எருமைப் பத்து (ஓரம்போகியார்)


மருதம் - எருமைப் பத்து (ஓரம்போகியார்)

மருதநிலத்துக் கருப்பொருளான எருமையை முன்வைத்துத் தொடர்புடைய செய்திகளைக் கூறி தலைவன், தலைவி, தோழி ஆகியோரின் நினைவோட்டங்களைக் கூறும் பாடல்கள் இவை.

பாடல் : 091
நெறிமருப்பு எருமை நீலைரும் போத்து
வெறிமலர்ப் பொய்கை ஆம்பல் மயக்கும்
கழனியூரன் மகளிவள்
பழன வெதிரின் கொடிப்பிணை யலளே. . . . .[091]

பொருளுரை:

இவள் இளையவள். வயலில் முளைக்கும் மூங்கில் போல் இளையவள். பற்றிப் படரும் கொடி போன்றவள். நன்செய்க் கழனி மிக்க ஊரனின் மகள். அவன் ஊரில் முறுக்கிய கொம்புகளை உடைய கருநிற எருமைக்கடா பொய்கையில் பூத்திருக்கும் ஆம்பல் கொடி மயங்கும்படி அழிக்கும்.

பாடல் : 092
கருங்கோட்டு எருமைச் செங்கண் புனிற்றுஆக்
காதற் குழவிக்கு ஊறுமுலை மடுக்கும்
நுந்தை நும்மூர் வருதும்
ஒண்தொடி மடந்தை நின்னையாம் பெறினே. . . . .[092]

பொருளுரை:

ஒளி வீசும் வளையல் அணிந்த மடந்தைப் பருவத்தவளே! உன் தந்தை ஊரில் அணிமையில் புதிதாகக் கன்று போட்டிருக்கும் தாய்-எருமை தன் கன்றுக்கு தன் சுரக்கும் மடியைத் தந்து பாலூட்டும். உன்னை நான் பெற்றால், அப்படிப்பட்ட எருமை வைத்திருக்கும் உன் தந்தை ஊருக்கு உன்னைப் பெண் கேட்டு வருவேன்.

பாடல் : 093
எருமைநல் ஏற்றினம் மேயல் அருந்தெனப்
பசுமோ ரோடமோடு ஆம்பல் ஒல்லா
செய்த இனைய மன்ற பல்பொழில்
தாதுண வெறுக்கைய ஆகி இவள்
போதுஅவிழ் முச்சி யூதும் வண்டே. . . . .[093]

பொருளுரை:

இவள் முச்சிக்கொண்டைப் பூவில் தேன் உண்ணும் வண்டுகள் மிகுதியாக மொய்க்கின்றன. மேயும் ஆண் எருமைகள் மாரோடம், ஆம்பல் பூக்களை மேய்ந்து அழித்துவிட்டதால் இவள் தலையில் மொய்க்கின்றன. – தோழி தலைவியின் தாயிடம் தாயிடம் கூறுகிறாள்.

பாடல் : 094
மள்ளர் அன்ன தடங்கோட்டு எருமை
மகளிர் அன்ன துணையோடு வதியும்
நிழல்முதிர் இலஞ்சிப் பழனத் ததுவே
கழனித் தாமரை மலரும்
கவின்பெறு சுடர்நூதல் தந்தை ஊரே. . . . .[094]

பொருளுரை:

அவள் தந்தையின் ஊர், வளமான உடல் படைத்த மள்ளரும் மகளிரும் கூடியாடுவது போல, ஆண்-எருமை பெண்-எருமை அருகில் படுத்திருக்கும் நிழலைக் கொண்டது. வயலில் பூக்கும் தாமரை குளத்தில் பூக்கும் பழனப் பூஞ்சோலை கொண்டது. – அவன் நினைக்கிறான்.

பாடல் : 095
கருங்கோட்டு எருமை கயிறுபரிந்து அசைஇ
நெடுங்கதிர் நெல்லின் நாள்மேயல் ஆரும்
புனல்முற் றூரன் பகலும்
படர்மலி அருநோய் செய்தனன் எமக்கே. . . . .[095]

பொருளுரை:

எருமைக்கடா கயிற்றை அறுத்துக்கொண்டு விளைந்திருக்கும் நெல்லை வயிறார மேயும் நீர்வளம் மிக்க ஊரினை உடையவன் அவன். அவன் என்னை நினைக்கவைக்கும் துன்பத்தைத் தருகிறான். – தலைவி தோழியிடம் சொல்கிறாள்.

பாடல் : 096
அணிநடை எருமை ஆடிய அள்ளல்
மணிநிற நெய்தல் ஆமபலொடு கலிக்கும்
கழனி ஊரன் மகளிவள்
பழன் ஊரன் பாயல்இன் துணையே. . . . .[096]

பொருளுரை:

அணிநடை போடும் எருமை ஆடித் திளைத்த சேற்றில் நெய்தலும் ஆம்பலும் பூத்திருக்கும் கழனிகள் கொண்ட ஊரன் இவளது தந்தை. இவளோடு படுத்திருப்பதே இனிமை. – தலைவன் நினைக்கிறான்.

பாடல் : 097
பகன்றை வான்மலர் மிடைந்த கோட்டைக்
கருந்தாள் எருமைக் கன்று வெரூஉம்
பொய்கை ஊரன் மகளிவள்
பொய்கைப் பூவினும் நறுந்தண் ணியளே. . . . .[097]

பொருளுரை:

நெல் சேமிப்புக் கோட்டை மேல் பகன்றைக் கொடி ஏறி வெண்ணிறப் பூக்களைப் பூத்திருக்கும். அதனைத் தன் தாய்-எருமை என்று நோக்கிய எருமைக்கன்று கருநிறத் தாய் வெள்ளையாக இருக்கிறதே என்று அஞ்சுமாம். (இது உள்ளுரைப் பொருள் தரும் இறைச்சி) இப்படிப்பட்ட பொய்கை இருக்கும் தந்தையின் மகள் இவள். இவள் பொய்கைநீரில் பூத்திருக்கும் பூவைக் காட்டிலும் குளுமையாக இருக்கிறாளே. – தலைவன் நினைக்கிறான்.

பாடல் : 098
தண்புணல் ஆடும் தடங்கோட்டு எருமை
திண்பிணி அம்பியின் தோன்றும் ஊர
ஒண்டொடி மடமகள் இவளினும்
நுந்தையும் யாயும் துடியரோ நின்னே. . . . .[098]

பொருளுரை:

நீரிலே குளிக்கும் எருமை நீரில் மிதக்கும்படிக் கட்டப்பட்டிருக்கும் அம்பி போல் தோன்றும் ஊரை உடையவனே! இவளை விலக்குகிறாய் [கடியள்]. நீ மிகவும் கொடுமைக்காரன். உன்னுடைய தந்தையும் தாயும் கூட உன் தகாத ஒழுக்கத்தைக் கடியமாட்டார்களோ? – தோழி இவ்வாறு தலைவனிடம் கடிந்துகொள்கிறாள்.

பாடல் : 099
பழனப் பாகல் முயிறுமூசு குடம்பை
கழனி யெருமை கதிரொடு மயக்கும்
பூக்கஞல் ஊரன் மகளிவள்
நோய்க்குமருந் தாகிய பணைத்தோ ளோளே. . . . .[099]

பொருளுரை:

இவள் ஊரன் மகள். பூ மணக்கும் [கஞல்] ஊரன் அவன். முயிறு கூடு கட்டியிருக்கும் பழனப்பாகையைத் தின்ற கழனி-எருமை வயலில் விளைந்திருக்கும் கதிரையும் தின்று அழிக்கும் ஊரன் அவன். அவன் மகள் என் காம நோய்க்கு மருந்தாகிய தோளை வைத்திருக்கிளாளே! – தலைவன் எண்ணி மகிழ்கிறான். பழனம் = பழந்தோப்பு, கழனி – விளைவயல்.

பாடல் : 100
புனலாடு மகளிர் இட்ட ஒள்ளிழை
மணலாடு சிமையத்து எருமை கிளைக்கும்
யாணர் ஊரன் மகளிவள்
பாணர் நரம்பினும் இன்கிள வியளே. . . . .[100]

பொருளுரை:

புனலில் விளையாடும்போது மகளிர் மணல்மேட்டில் கழற்றி வைத்த அணிகலன்களை அங்கு வந்த எருமை வாயால் கிண்டித் தள்ளிவிட்டு மேயும் ஊரை உடையவன் இவள் தந்தை. இவள் வாயிலிருந்து வரும் சொல் பாணர் மீட்டும் யாழிசையைக் காட்டிலும் இனிக்கிறதே. – தலைவன் சொல்கிறான். நரம்பு = யாழ்.