ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
குறுந்தொகை நான்கு தொடக்கம் எட்டு வரையான அடிகளைக் கொண்டமைந்த 401 பாடல்களின் தொகுப்பு. குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் இது குறுந்தொகை எனப் பெயர் பெற்றது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
அகநானூறு அகத்திணை சார்ந்த நூல் என்பதுடன் இதில் நானூறு பாடல்கள் அடங்கியுள்ளதால் இது அகநானூறு என வழங்கப்படுகிறது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
ஐங்குறுநூறு - எட்டுத்தொகை

தொகுத்தோன் :- புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்.
தொகுப்பித்தோன் :- யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்ற சேர வேந்தன்.
500 பாடல்கள்.
திணைக்கொருவர்படி 5 புலவர்களால் பாடப்பெற்றது.

தொகுத்தோன் :- புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்.
தொகுப்பித்தோன் :- யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்ற சேர வேந்தன்.
500 பாடல்கள்.
திணைக்கொருவர்படி 5 புலவர்களால் பாடப்பெற்றது.
ஐங்குறுநூறு எட்டுத்தொகை என வழங்கும் தொகுப்பு நூல்களுள் ஒன்று. இதிலுள்ள பாடல்கள் சங்க காலத்தைச் சேர்ந்தவை. மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் ஐந்து நிலம் சார்ந்த திணை ஒவ்வொன்றிற்கும் நூறு பாடல்கள் வீதம் இந் நூலில் ஐந்நூறு அகத்திணைப் பாடல்கள் உள்ளன. இது 3 அடி சிற்றெல்லை 6 அடி பேரெல்லை ஆகும். ஆசிரியப்பாவால் ஆன இந்நூலுக்கு கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார்.
ஐங்குறுநூற்றில் அடங்கியுள்ள பாடல்களில் ஒவ்வொரு திணையைச் சேர்ந்த பாடல்களும் ஐந்து வெவ்வேறு புலவர்களால் இயற்றப்படுள்ளன. ஆகமொத்தம் ஐந்து புலவர்கள் இவற்றை இயற்றியுள்ளனர். இதனைப் பின்வரும் பாடலால் நாம் அறியலாம்.
மருதமோ ரம்போகி நெய்தலம் மூவன்
கருதும் குறிஞ்சி கபிலர் - கருதிய
பாலையோத லாந்தை பனிமுல்லை பேயனே
நூலையோ தைங்குறு நூறு.
1. மருதத் திணைப் பாடல்கள்(100) - ஓரம்போகியார்
2. நெய்தல் திணைப் பாடல்கள்(100) - அம்மூவனார்
3. குறிஞ்சித் திணைப் பாடல்கள்(100) - கபிலர்
4. பாலைத் திணைப் பாடல்கள்(100) - ஓதலாந்தையார்
5. முல்லைத் திணைப் பாடல்கள்(100) - பேயனார்
ஒருவன் இருதாள் நிழற்கீழ்
மூவகை உலகும் முகிழ்த்தன முறையே.
தெளிவுரை:
நீலமேனியினளான, தூய அணிகள் பூண்ட தேவியைத் தன் இடப்பாகத்தே உடையவனான ஒப்பற்ற பெருமானின், இரு திருவடிகள் நிழலின் கீழாக, 'மேடு நடு கீழ்' என்னும் மூவகை உலகங்களும், உமறையே, பண்டு தோன்றின.
சொற்பொருள்:
வாலிமை - தூய்மை; வாலிழை - தூய அணிகளை உடையாளான அம்பிகை. ஒருவன் - ஒப்பற்றவன்; அவன் ஒருவனே ஒருபாதி ஆணும், மற்றொரு பாதி பெண்ணுமாகி அமைந்தவன் என்பதுமாம். மூவகை உலகு - மேல், நடு, கீழ் என்னும் உலகங்கள்; 'உலகு' எனவே, உலகமும் அதிலுள்ளன யாவும் எனப் பொருள் விரித்தும் கொள்ளலாம்; அவன் அவள் அது எனும் மூவகையாற் சுட்டப்படும் உலகும் ஆம். முறையே - ஒன்றன்பின் மற்றொன்றாக; முதலில் தேவருலகங்களும், அடுத்து மானிட உலகும், இறுதியில் பாதலமும் தோன்றியதெனக் கூறும் தோற்ற முறைமையையும் இது குறிக்கும்.
விளக்கம்:
'நீலமேனி வாலிழைபாகமான வடிவம்' நினைவிற்கும் பேரின்பம் அளிப்பது; ஒரு பாதி செவ்வண்ணம், மற்றொரு பாதி நீலவண்ணம். ஒளிசெறிந்த இவை தம்முள் கலந்து இணைந்து ஒளிவீசக் காணும் பாவனைக் காட்சியே அளப்பிலாப் பேரின்பமாவதாகும். 'பெண்ணுரு ஒரு திறன் ஆகின்றது' எனப் புறமும் (புறம் 379) இவ்வழகைப் போற்றும். மூவகை உலகமும் முகிழ்த்தற்கு இடனாகிய தாள்நிழல் சேரின், நமக்கும் நலன் விளைதல் உறுதி என்பதும், இதனால் கற்பாரை உணர வைத்தனர். அத் தாள்நிழல் இந்நூலை என்றும் காப்பதாக என்பதும் கூறினர்.
- 01. வேட்கைப் பத்து
- 02. வேழப்பத்து
- 03. கள்வன் பத்து
- 04. தோழிக்கு உரைத்த பத்து
- 05. புலவிப் பத்து
- 06. தோழி கூற்றுப் பத்து
- 07. கிழத்தி கூற்றுப்பத்து
- 08. புனலாட்டுப் பத்து
- 09. புலவி விராய பத்து
- 10. எருமைப் பத்து
- 11. தாய்க்கு உரைத்த பத்து
- 12. தோழிக்கு உரைத்த பத்து
- 13. கிழவற்கு உரைத்த பத்து
- 14. பாணற்கு உரைத்த பத்து
- 15. ஞாழற் பத்து
- 16. வெள்ளங் குருகுப் பத்து
- 17. சிறுவெண் காக்கைப் பத்து
- 18. தொண்டிப் பத்து
- 19. நெய்தற் பத்து
- 20. வளைப் பத்து
- 21. அன்னாய் வாழிப் பத்து
- 22. அன்னாய்ப் பத்து
- 23. அம்மவழிப் பத்து
- 24. தெய்யோப் பத்து
- 25. வெறிப்பத்து
- 26. குன்றக் குறவன் பத்து
- 27. கேழற் பத்து
- 28. குரக்குப் பத்து
- 29. கிள்ளைப் பத்து
- 30. மஞ்ஞைப் பத்து
முதலாவது பத்து
மருதம் - ஓரம்போகியார்
இரண்டாவது பத்து
நெய்தல் - அம்மூவனார்
மூன்றாவது பத்து
குறிஞ்சி - கபிலர்
- 31. செலவு அழுங்குவித்த பத்து
- 32. செலவுப் பத்து
- 33. இடைச்சுரப் பத்து
- 34. தலைவி இரங்கு பத்து
- 35. இளவேனிற் பத்து
- 36. வரவுரைத்த பத்து
- 37. முன்னிலைப் பத்து
- 38. மக்கட் போக்கிய வழித் தாயிரங்கு பத்து
- 39. உடன்போக்கின் கண் இடைச் சுரத்து உரைத்த பத்து
- 40. மறுதரவுப் பத்து
- 41. செவிலி கூற்றுப் பத்து
- 42. கிழவன் பருவம் பாராட்டுப் பத்து
- 43. விரவுப் பத்து
- 44. புறவணிப் பத்து
- 45. பாசறைப் பத்து
- 46. பருவங்கண்டு கிழத்தி யுரைத்த பத்து
- 47. தோழி வற்புறுத்த பத்து
- 48. பாணன் பத்து
- 49. தேர் வியங்கொண்ட பத்து
- 50. வரவுச் சிரப்புரைத்த பத்து