பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை


இளந்திரையனது மலையின் பெருமை

பாடல் வரிகள்:- 494 - 500

கின்னரம் முரலும் அணங்கு உடை சாரல்
மஞ்ஞை ஆலும் மரம் பயில் இறும்பின் . . . .[495]

கலை பாய்ந்து உதிர்த்த மலர் வீழ் புறவின்
மந்தி சீக்கும் மா துஞ்சு முன்றில்
செம் தீ பேணிய முனிவர் வெண் கோட்டு
களிறு தரு விறகின் வேட்கும்
ஒளிறு இலங்கு அருவிய மலை கிழவோனே . . . .[494 - 500]

பொருளுரை:

கின்னரம் என்னும் சில்லு வண்டுகள் ஒலித்துக் கொண்டேயிருக்கும் அச்சம் தரும் மலைச்சாரலில் மயில்கள் மகிழ்ந்து விளையாடும். அந்த மரமடர்ந்த காடுகளில் ஆண் குரங்குகள் பாய்ந்து விளையாடும். அப்போது மண்ணில் வீழ்ந்த மலர்களைப் பெண்குரங்குகள் சீய்த்து விளையாடும். அங்கே விலங்குகள் துஞ்சும். புறவு என்பது முல்லைநிலம். அங்குள்ள குடில் முற்றங்களில் முனிவர்கள் தீ வளர்ப்பர். களிறுகள் கொண்டு வந்து தந்த விறகுகளைக் கொண்டு தீ வளர்த்து வேள்வி செய்வர். அருகில் தெளிந்த ஓளியுடன் பளிச்சிடும் அருவிகள் பல வீழ்ந்தோடும். இப்படிப்பட்ட மலைநாட்டை ஆளும் உரிமை பெற்ற அரசன் தான் தொண்டைமான் இளந்திரையன். ஏற்காடு அல்லது சேர்வராயன் மலைப்பகுதி தொண்டைமானின் ஆட்சிக்கு அக்காலத்தில் உட்பட்டிருந்தது போலும் சவ்வாது மலைப்பகுதி என்பது டாகடர் மா, இராசமாணிக்கனார் கருத்து.