பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை


மருத நிலத்து ஊர்களில் பெறும் உணவுகள்

பாடல் வரிகள்:- 243 - 256

பகட்டு ஆ ஈன்ற கொடு நடை குழவி
கவை தாம்பு தொடுத்த காழ் ஊன்று அல்குல்
ஏணி எய்தா நீள் நெடு மார்பின் . . . .[245]

முகடு துமித்து அடுக்கிய பழம் பல் உணவின்
குமரிமூத்த கூடு ஓங்கு நல் இல்
தச்ச சிறாஅர் நச்ச புனைந்த
ஊரா நல் தேர் உருட்டிய புதல்வர்

பொருளுரை:

வீடுகளில் நெல்லை சேமிக்கும் ஓங்கி உயர்ந்த கூடுகள் இருக்கும். அவை குமரி மூத்த கூடுகள். அதாவது அழியாத் தன்மை வாய்ந்த பழமையான கூடுகள். அவற்றில் பழங்கால நெல்லின் சேமிப்பு உண்டு. ( புது நெல்லை விடப் பழைய நெல்லேசிறந்தது. விலையும் அதிகம். ) ஓங்கி உயர்ந்த அந்தக் கூடுகளின் மார்புப் பகுதியில் ஏணியைச் சார்த்தி நெல் எடுக்கும் பழக்கம் இல்லை. அதன் மேல் முகட்டை உடைத்துவிட்டு நெல்லை எடுப்பது வழக்கம். இந்தக் கூடுகளின் அல்குல் பகுதியில் ( குருகிய இடைவெளிப் பகுதியில் ) பசு ஈன்றெடுத்த கன்றுக் குட்டி நீண்ட கயிற்றில் தும்பு மாட்டிக் கட்டப் பட்டிருக்கும். ( கவைத்தாம்பு = தும்பு ) உழவரின் புதல்வர்கள் - தச்சர்களின் சிறுவர்கள் நடை வண்டிகளைச் செய்து தருவார்கள். அவை ஊர்ந்து செல்ல முடியாத வண்டிகள். உழவர்களின் புதல்வர்கள் அதனை உருட்டிச் செல்வர்.

தளர் நடை வருத்தம் வீட அலர் முலை . . . .[250]
செவிலி அம் பெண்டிர் தழீஇ பால் ஆர்ந்து
அமளி துஞ்சும் அழகு உடை நல் இல்

பொருளுரை:

தக்கா புக்கா என்று தளர்நடை போட்டு வண்டி உருட்டிச் சென்ற குழந்தைகளின் வருத்தம் தீரும்படிச் செவிலியர் பாலூட்டுவர். செவிலியர் அலர்முலைப் பெண்டிர். மலர்ந்தமுலை உடையவர் எனக் கூறப்படுவதால் இவர்கள் வயது முதிர்ந்த பெண்டிர் எனத் தெரியவருகிறது. இவர்கள் தம் மார்போடு தழுவிக்கொண்டு பாலூட்டுவர். பாடூட்டித் தூங்கவைப்பர். வீட்டுக் கட்டில் மெத்தையில் தூங்கவைப்பர்.

தொல் பசி அறியா துளங்கா இருக்கை
மல்லல் பேரூர் மடியின் மடியா
வினைஞர் தந்த வெண்ணெல் வல்சி . . . .[255]

மனை வாழ் அளகின் வாட்டொடும் பெறுகுவிர்

பொருளுரை:

அங்குள்ள மக்களுக்கு வேளை தவறி உண்ணும் பழம்பசி இல்லை. வளம் மிக்க அப் பேரூரில் செல்வ வளம் தளர்வதுகூட இல்லை. ஊரே தூங்கி விட்டாலும் வினைஞர் என்னும் தொழிலாளர் இல்லங்களில் விருந்து உண்டு. சோம்பலின்றித் தூங்காமல் பாடுபடும் உழவுத் தொழிலாளர்கள் விளைவித்துத் தந்த வெண்ணெல் (சம்பா) அரிசிச் சோறு பெறலாம். கோழிக்கறி வறுவலுடன் பெறலாம்.