பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை


மருத நிலத்தைச் சேர்ந்த முல்லைநிலம்

பாடல் வரிகள்:- 197 - 206

குடி நிறை வல்சி செம் சால் உழவர்
நடை நவில் பெரும் பகடு புதவில் பூட்டி
பிடி வாய் அன்ன மடி வாய் நாஞ்சில்
உடுப்பு முக முழு கொழு மூழ்க ஊன்றி . . . .[200]

தொடுப்பு எறிந்து உழுத துளர் படு துடவை
அரி புகு பொழுதின் இரியல் போகி
வண்ண கடம்பின் நறு மலர் அன்ன
வளர் இளம் பிள்ளை தழீஇ குறும் கால்
கறை அணல் குறும்பூழ் கட்சி சேக்கும் . . . .[205]

வன்புலம் இறந்த பின்றை மென் தோல் . . . .[197 - 206]

பொருளுரை:

விருந்து உண்டபின் உழுத துடவை நிலங்களையும், உழாத வன் புலங்களையும் கடந்து செல்ல வேண்டும். ( கலப்பை உழுது செல்லும் பள்ளத்தை இக்காலத்தில் படைச்சால் என்பர். நன்செய் நிலத்தில் அவை உழும்போதே மறைந்துவிடும். புன்செய் நிலத்தில் அவை கரை கரையாகத் தெரியும். இது புன்செய் நிலத்தில் செஞ்சால் என்று குறிப்பிடப்படுகிறது. ) செஞ்சால் உழவர்களின் வீட்டில் சேமிப்பாகக் குடும்பத்தை நிறைவு செய்யும் வகையில் செந்நெல் போன்ற தானியங்கள் நிறைந்திருந்தன. என்றாலும் அவன் துடவையைத் துகள் ( துளர் ) படும்படி உழுகிறான். பழக்கப்பட்ட காளைகளை நுகத்தில் பூட்டி உழுகிறான். அவனது நாஞ்சில் கலப்பையானது துதிக்கையோடு கூடிய பெண்யானையின் தலை போன்றது. உடுப்புமுகம் என்பது உடும்பு போன்ற முகம். அது கலப்பையின் நாவுப் பகுதி. அதில் இரும்பாலான கொழுவும் சேர்ந்திருக்கும். நாவும் கொழுவும் மண்ணுக்குள் மூழ்கிப்போகும் அளவுக்கு உழவன் ஆழமாக உழுதான். புன்செய் உழவு - படைசாலில் விதைகள் போடப்பட்டன. ( அடுத்து வரும் உழவுக்காலின் போது விதை தானே ஊன்றப்பட்டு விடும். ) இப்படி உழப்பட்ட நிலங்களைத் தாண்டிச் செல்ல வேண்டும். அடுத்து வன்புலத்தைக் கடக்க வேண்டும். அங்கே குறும்பூழ்ப் பறவைகள் (காடை) மேயும். அவற்றின் குஞ்சுகள் நல்ல வண்ணமுள்ள கடப்பம்பூ போன்ற மயிர்களைக் கொண்டவை. வழிப்போக்கர்களைக் கண்டதும் அவை தம் குஞ்சுகளை அழைத்துக்கொண்டு சென்று தம் கட்சியில் (கூட்டில்) பதுங்கிக் கொள்ளும்.