பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை


வம்பலர் கழுதைச் சாத்தொடு செல்லும் காட்டு வழி

பாடல் வரிகள்:- 066 - 082

எல் இடை கழியுநர்க்கு ஏமம் ஆக
மலையவும் கடலவும் மாண் பயம் தரூஉம்
அரும் பொருள் அருத்தும் திருந்து தொடை நோன் தாள்
அடி புதை அரணம் எய்தி படம் புக்கு
பொரு கணை தொலைச்சிய புண் தீர் மார்பின் . . . .[70]

விரவு வரி கச்சின் வெண் கை ஒள் வாள்
வரை ஊர் பாம்பின் பூண்டு புடை தூங்க
சுரிகை நுழைந்த சுற்று வீங்கு செறிவு உடை
கரு வில் ஓச்சிய கண் அகன் எறுழ் தோள்
கடம்பு அமர் நெடு வேள் அன்ன மீளி . . . .[75]

உடம்பிடி தட கை ஓடா வம்பலர்
தடவு நிலை பலவின் முழு முதல் கொண்ட
சிறு சுளை பெரும் பழம் கடுப்ப மிரியல்
புணர் பொறை தாங்கிய வடு ஆழ் நோன் புறத்து
அணர் செவி கழுதை சாத்தொடு வழங்கும் . . . .[80]

உல்கு உடை பெரு வழி கவலை காக்கும்
வில் உடை வைப்பின் வியன் காட்டு இயவின் . . . .[66 - 82]

பொருளுரை:

மீளி, சாத்து, உல்குவரி வாங்குவோர் முதலானோர் உங்களுக்கு உதவுவர். மீளி - மீளி என்பவன் அரசனின் ஆணைப்படி வழிப்போக்கர்களுக்கு உதவி செய்யும் காவல்காரன் (= போலீஸ்காரன் ). கடப்பம்பூவைச் சூடிய முருகனைப் போல உதவுபவன். அவன் காலில் செருப்பு (அடிபுதை அரணம்) ஆணிந்திருப்பான். கால்சட்டை அணிந்திருப்பான். அவனது மார்பிலே அம்புகள் துளைத்து ஆறிப்போன புண்கள் இருக்கும். அதில் பெருக்கல் குறிபோல வரிந்து கட்டிய கச்சு. அவனுக்கு அகன்ற கணையமரம் போன்ற தோள். அதன் ஒருபக்கம் கருமைநிற வில். மற்றொரு பக்கம் பளபளக்கும் வெண்மை ஒளியுடன் கூடிய வாள். (திருடர்களைப் பயமுறுத்தும் கருவி). வில்லும் வாளும் அவனது மார்புப்பாறை மேல் கறுப்பும் வெள்ளையுமாக ஊர்ந்து செல்லும் இரண்டு பாம்புகள் போலக் காணப்படும். முதுகுப்பக்கம் அம்பு வைத்திருக்கும் சுரிகை. பகைவரைக் கையால் குத்தித் தாக்கும் உடம்பு இடித் தடக்கை. இப்படிப்பட்ட மீளி இரவுக் காலத்தில் புதிதாகச் செல்லும் வழிப் போக்கர்களுக்கு (வம்பலர்களுக்கு)ப் பாதுகாவலாக வந்து உதவி செய்வான். சாத்து - நிலவழி வாணிகம் செய்பவர்களின் கூட்டம் சாத்து எனப்படும். சாத்து வாணிகர் தம் பண்டங்களைக் கழுதைமேல் ஏற்றிச் செல்வர். வளைந்து தாழ்ந்த பலாக்கிளையின் இரண்டு பக்கங்களிலும் பலாப்பழங்கள் பழுத்திருப்பது போல் கழுதையின் மேல் பண்டப் பொதிகள் இருக்கும். பண்டப்பொதி இரு பக்கமும் இருப்பதால் அது புணர்பொதி எனப்பட்டது. பொதியைச் சுமந்து சுமந்து கழுதையின் முதுகு காப்புக் காய்த்திருந்தது. தாங்கிப் பழக்கப்பட்டதால் அதன் முதுகு நோன்புறம் ஆயிற்று. கவலை - பிரிந்து செல்லும் வழி கவலை எனப்படும். (அந்தப் பெண்ணா, இந்தப் பெண்ணா? திருமணம் நடக்குமா, நடக்காதா? என்பது போன்றெல்லாம் மனம் இரண்டு வழிகளில் பிரிந்து ஊசலாடுவதும் கவலைதான்.) உல்கு - வழிகள் கூடும் இடங்களில் வணிகரிடம் சுங்கவரி வாங்கப்பட்டது. வில் - அகன்ற காட்டுப்பாதை (இயவு) வழியின் குறுக்கே வில்மரத்தால் தடுத்து உல்கு வாங்கினர். இவர்களும் புதிய வழிப் போக்கர்களுக்கு உதவுவர்.