பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை


தோப்புக் குடிகளில் நிகழும் உபசாரம்

பாடல் வரிகள்:- 352 - 362

குன்று உறழ் யானை மருங்குல் ஏய்க்கும்
வண் தோட்டு தெங்கின் வாடு மடல் வேய்ந்த
மஞ்சள் முன்றில் மணம் நாறு படப்பை
தண்டலை உழவர் தனி மனை சேப்பின் . . . .[355]

பொருளுரை:

கலங்கரை விளக்குப் பகுதியைத் தாண்டிச் சென்றால் மஞ்சள் விளையும் படப்பைப் பகுதியில் தண்டலை உழவர்களின் தனி மனைகளை அடையலாம். அந்தத் தனிமனை குன்றுபோல் உயர்ந்திருக்கும். யானைக்கால் போல் நான்கு கால் நட்டு அதன் பரண்மீது கட்டப்பட்டிருக்கும். அது தென்னங் கீற்றுகளால் வேயப்பட்டிருக்கும். அங்கு சென்றால் விருந்துணவு பெறலாம்.

தாழ் கோள் பலவின் சூழ் சுளை பெரும் பழம்
வீழ் இல் தாழை குழவி தீம் நீர்
கவை முலை இரும் பிடி கவுள் மருப்பு ஏய்க்கும்
குலை முதிர் வாழை கூனி வெண் பழம்
திரள் அரை பெண்ணை நுங்கொடு பிறவும் . . . .[360]

தீம் பல் தாரம் முனையின் சேம்பின்
முளை புற முதிர் கிழங்கு ஆர்குவிர் பகல் பெயல் . . . .[352 - 362]

பொருளுரை:

தண்டலை உழவர் விருந்தில் பலாச்சுளை, பதநீர், இளநீர், மரத்திலேயே பழுத்த வாழைப்பழம், பனை நுங்கு, முதிர்ந்த சேப்பங் கிழங்கு அவியல் முதலானவை படைக்கப் படும். பலாப்பழம் தாழ்ந்த வேரில் பழுத்தது. விழுதில்லாத தாழை என்பது தென்னை மரத்தையும், பனை மரத்தையும் குறிக்கும். இந்தத் தாழையின் இளங் குருத்துகளைச் சீவிப் பெற்ற வடிநீர் பருகலாம். குலையிலேயே முதிர்ந்து கனிந்து தொங்கும் வாழைப்பழம் தரப்படும். உரித்தால் வெள்ளையாக இருப்பதால் வாழைப்பழத்தை வெண்பழம் என்று பாடல் குறிப்பிடுகிறது. இது இரண்டு முலைக்காம்புகள் கொண்ட பெண்யானையின் தந்தம் போல் இருக்கும். அடி பருத்து ஓங்கியுள்ள பனைமரத்தின் நுங்கும் வெண்பழம் போன்றது. இவற்றை உண்டு சலிக்கும் போது நல்லுணவு (நெல்லஞ்சோறு) பெறலாம். அந்தச் சோற்றுக்குச் சேப்பங் கிழங்குக் குழம்பு. இப்படி வயிறார உண்பீர்கள்.