பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை


அந்தணரது உறைவிடங்களில் பெறுவன

பாடல் வரிகள்:- 297 - 310

செழும் கன்று யாத்த சிறு தாள் பந்தர்
பைஞ்சேறு மெழுகிய படிவ நல் நகர்
மனை உறை கோழியொடு ஞமலி துன்னாது
வளை வாய் கிள்ளை மறை விளி பயிற்றும் . . . .[300]

மறை காப்பாளர் உறை பதி சேப்பின்

பொருளுரை:

மறைகாப்பாளர் வாழும் இடங்கள் நோன்பு நோற்கும் படிவ நிலையில் கொணப்படும். பருமன் இல்லாத கால் நட்டுப் பந்தல் போடப்பட்டிருக்கும். அந்தப் பந்தர்க்காலில் பசுவின் கொழுகொழு கன்று கட்டப்பட்டிருக்கும். பந்தலின் கீழே உள்ள தரை பைஞ்சேற்றால் (பசுவின் சாணத்தால்) மெழுகப்பட்டிருக்கும். கோழியோ, நாயோ அங்கு இருக்காது. பந்தலில் உள்ள கூட்டில் வளர்க்கப்படும் வளைந்த வாயினையுடைய கிளிக்கு அவர்கள் தம் மறை மொழிகளைச் சொல்லிப் பயில வைத்துக்கொண்டிருப்பார்கள்.

பெரு நல் வானத்து வட வயின் விளங்கும்
சிறுமீன் புரையும் கற்பின் நறு நுதல்
வளை கை மகடூஉ வயின் அறிந்து அட்ட
சுடர் கடை பறவை பெயர் படு வத்தம் . . . .[305]

சேதா நறு மோர் வெண்ணெயின் மாதுளத்து
உருப்புறு பசும் காய் போழொடு கறி கலந்து
கஞ்சக நறு முறி அளைஇ பைம் துணர்
நெடு மர கொக்கின் நறு வடி விதிர்த்த
தகை மாண் காடியின் வகைபட பெறுகுவிர் . . . .[310]

பொருளுரை:

மறைகாப்பாளர் வாழும் இடங்களுக்குச் சென்றால் அவர்களின் மனைவியர் நல்கும் உணவைப் பெறலாம். அகன்ற வானத்தின் வடபால் விளங்கும் சாலிமீன் (அருந்ததி விண்மீன் Polaris) அந்த விண்மீன் போன்று நிலைமாறாத இருப்புத் தன்மையைக் கற்பு எனல் தமிழர் கோட்பாடு. இப்படிக் கற்புக்கடம் பூண்ட அந்தணர் சலைக்கும்போது தம் வளையலணிந்த புறங்கைகளால் நெற்றியில் வடியும் வியர்வையைத் துடைத்துக் கொண்டு சமைப்பார்கள். சோற்றுக்கு வத்தல் போட்ட மோர்க்குழம்பு உண்டு. அந்த வத்தல் (வத்தம்) சுடர்க்கடைப் பறவையின் பெயரைக் கொண்டது. (கோழியவரை வத்தல் போலும்) மாதுளையின் பச்சைக் காயைப் பிளந்து வெண்ணெயில் வதக்கிய கறியும் உண்டு. மோரும் வெண்ணெயும் உண்ணத் தருவார்கள்.அவை செவ்விய பசு தந்த பாலைக் காய்ச்சிப் பெறப்பட்டவை. வத்தல் குழம்பிலும், கறிகாயிலும் கஞ்சுகத்தை (கறி வேப்பிலையைக்) கிள்ளிப் போட்டிருப்பார்கள். மாவடு ஊறுகாயும் உண்டு. (மாமரத்துக்குக் கொக்கு என்னும் பெயரும் உண்டு. வடி என்பது வடுவைக் குறிக்கும். நெடுமரக் கொக்கின் நறுவடி என்பது பாடலில் மாவடுவைக் குறிக்கும்.) (காடி என்பது உப்பிட்டுப் புளித்த ஊறுகாய்.) மறைகாப்பாளர் இல்லங்களுக்குச் சென்றால் வகைபடச் (வக்கணையாகச்) சமைக்கப்பட்ட இவற்றை வகையோடு பெறுவீர்கள்.