பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை


காலையில் நீர்ப்பூக்களைச் சூடிப் போதல்

பாடல் வரிகள்:- 283 - 296

பச்சூன் பெய்த சுவல் பிணி பைம் தோல்
கோள் வல் பாண்மகன் தலை வலித்து யாத்த
நெடும் கழை தூண்டில் நடுங்க நாண் கொளீஇ . . . .[285]

கொடு வாய் இரும்பின் மடி தலை புலம்ப
பொதி இரை கதுவிய போழ் வாய் வாளை
நீர் நணி பிரம்பின் நடுங்கு நிழல் வெரூஉம்

பொருளுரை:

பாண்மகன் தூண்டில் போட்டு மீன் பிடிப்பான். மீன்தூண்டிலில் மாட்டுவதற்காகத் தரப்படும் இறைச்சி இரையைத் தோல் பையில் போட்டு அதனைத் தோளில் மாட்டிக் கொண்டிருப்பான். நீண்ட மூங்கில் கோலின் நுனித்தலையில் மெல்லிய நரம்பு நூலைக் கட்டி அதன் மற்றொரு நுனியில் இரும்பினாலான தூண்டிலைக் கட்டியிருப்பான் தூண்டிலின் இரும்பு தெரியாதபடி பச்சைக் கறி செருகப் பட்டிருக்கும். வாளைமீன் அந்த இறையைக் கவ்வும்.. எனினும் எப்படியோ தப்பிவிடும். தப்பிய வாளைமீன் பிரம்புப் புதருக்குப் பக்கத்தில் செல்லும்போது வளர்ந்திருக்கும் பிரம்பின் நிழலைப் பார்த்து அதனைத் தூண்டிலின் கோல் என்று எண்ணி நடுங்கும்.

நீத்து உடை நெடும் கயம் தீ பட மலர்ந்த
கடவுள் ஒண் பூ அடைதல் ஓம்பி . . . .[290]

உறை கால் மாறிய ஓங்கு உயர் நனம் தலை
அகல் இரு வானத்து குறைவில் ஏய்ப்ப
அரக்கு இதழ் குவளையொடு நீலம் நீடி
முரண் பூ மலிந்த முது நீர் பொய்கை
குறுநர் இட்ட கூம்பு விடு பன் மலர் . . . .[295]

பெருநாள் அமையத்து பிணையினிர் கழிமின் . . . .[283 - 296]

பொருளுரை:

இத்தகைய தன்மையினைக்கொண்டு அகன்று விரிந்த குளம் ஆழமானது. அக் குளத்தில் தீ எரிவது போலக் கடவுள் ஒண்பூ (செந்தாமரை) மலர்ந்திருக்கும். பிரம்பு நிழலைக் கண்டு நடுங்கிய வாளைமீன் கடவுள் ஒண்பூவின் பக்கம் செல்லாமல் பாதுகாப்பாக விலகிச் செல்லும். தன் உறைவிடத்தைத் தாமரையின் பக்கம் அமைத்துக் கொள்ளாமல் செங்குவளை பூத்திருக்கும் பகுதியில் அமைத்துக் கொள்ளும். அரக்கு நிறம் கொண்ட செங்குவளைப் பூவும் நீலம் என்று சொல்லப்படும் நீலப்பூவும் நீர் மட்டம் வரையில் ஓங்கி உயர்ந்து சிவப்பு, பச்சை (இலை), நீலம் என்றெல்லாம் முரண்பட்ட நிறங்களில் அந்த முதுநீர்ப் பொய்கையில் தழைத்திருக்கும். நாண் இல்லாத குறைவில் (குறைந்திருக்கும் வில்) தான் வானவில். பொய்கையில் பூத்திருக்கும் அந்தப் பூக்கள் முழுமையாகத் தோன்றாமல் அறைகுறையாகத் துண்டுபட்டிருக்கும் வானவில் போலத் தோன்றும். பொய்கையைத் தூய்மை செய்வோர் அப் பூக்களைக் களைந்து கரையில் எறிவர். கரையில் கிடக்கும்போதும் அவை மொட்டு விட்டுப் பூக்கும். அவற்றில் கடவுள் பூவாகிய தாமரையை விடுத்து ஏனையவற்றை நல்லநாள் பெரியநாள் வரும்போது கண்ணியாகவோ, மாலையாகவோ கட்டி அணிந்து கொண்டு செல்லுங்கள்.