பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை


பட்டினத்து மக்களின் உபசரிப்பு

பாடல் வரிகள்:- 337 - 345

பைம் கொடி நுடங்கும் பலர் புகு வாயில்
செம் பூ தூய செதுக்கு உடை முன்றில்
கள் அடு மகளிர் வள்ளம் நுடக்கிய
வார்ந்து உகு சில் நீர் வழிந்த குழம்பின் . . . .[340]

ஈர் சேறு ஆடிய இரும் பல் குட்டி
பல் மயிர் பிணவொடு பாயம் போகாது
நெல்மா வல்சி தீற்றி பல் நாள்
குழி நிறுத்து ஓம்பிய குறும் தாள் ஏற்றை
கொழு நிண தடியொடு கூர் நறா பெறுகுவிர் . . . .[337 - 345]

பொருளுரை:

பரதர் அன்னக்கொடி கட்டி உணவு படைப்பார்கள். உணவு படைக்கும் இடம் பலர் புகு வாயிலைக் கொண்டது. அது செம்மண்ணால் மெழுகப் பட்டிருக்கும். (இக்காலத்தில் சிவப்புக் கம்பள வரவேற்பு தரப்படுவது போல) அன்று அங்கே சிவப்புப் பூக்களை முற்றத்தில் விரித்துப் பரப்பி விருந்தினரை வரவேற்பர். மகளிர் கள் காய்ச்சுவர் அதனை வள்ளத்தில் தருவார்கள். வழிய வழிய ஊற்றி அவர்கள் கள்ளைத் தருவர். அப்போது வழிந்து உகும் கள் நிலத்தைக் குழம்பாக்கிச் சேறாக்கும். அந்தச் சேற்றில் பன்றிக் குட்டிகள் தம் தாயோடு புரளும். பாயம் என்பது பன்றிகளுக்கு அதனை வளர்ப்போர் வார்க்கும் கஞ்சி. இங்குக் கள்ளுச் சேற்றில் புரளும் பன்றிகள் தமக்கு வார்க்கும் கஞ்சியை நாடிச் செல்வதில்லை அன்னக்கொடி கட்டி உணவளிக்கும் இடத்தில் பாயும் கஞ்சியைப் பருகிவிட்டுப் பல நாள் அந்தக் குழிகளிலேயே ஆண்-பன்றியையும் பெண்-பன்றியும் சேர்த்துகொண்டு தங்கி விடும். அங்குச் சென்றால் பன்றிக் கறியுடன் நறாக் கள்ளும் பெறலாம்.