பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை

முல்லை நிலத்து உழுது உண்பாரது ஊர்களில் கிடைப்பன
பாடல் வரிகள்:- 185 - 196
பிடி கணத்து அன்ன குதிர் உடை முன்றில்
களிற்று தாள் புரையும் திரி மர பந்தர்
குறும் சாட்டு உருளையொடு கலப்பை சார்த்தி
நெடும் சுவர் பறைந்த புகை சூழ் கொட்டில்
பருவ வானத்து பா மழை கடுப்ப . . . .[190]
கரு வை வேய்ந்த கவின் குடி சீறூர்
பிடிக்கணத் தன்ன குதிருடை முன்றிற்
களிற்றுத்தாள் புரையுந் திரிமரப் பந்தர்க்
குறுஞ்சாட் டுருளையடு கலப்பை சார்த்தி
நெடுஞ்சுவர் பறைந்த புகைசூழ் கொட்டிற்
பருவ வானத்துப் பாமழை கடுப்பக் . . . .[190]
கருவை வேய்ந்த கவின்குடிச் சீறூர்
பொருளுரை:
இந்தச் சிற்றூர் எழுந்தோங்கிய முள்மரக் காடுகளை ஆடையாக உடுத்திக் கொண்டிருக்கும். வரைப்பு எனப்படும் ஊரின் எல்லைப் பகுதிகளில் மாட்டுத் தொழுவங்கள் இருக்கும். அடுத்து தானியங்களைச் சேமித்து வைக்கும் குதிர்கள் பெண் யானைக் கூட்டம் போல் காணப்படும் அது குதிர்முற்றம் முற்றத்தின் உட்பகுதியில் பந்தல். அதற்கு யானையின் கால்களைப் போலப் பந்தர்க்கால்கள். இவை முடிச்சுமரக் கால்கள். (திரிமரம்) பந்தலில் சாட்டு உருளைகள் மாட்டப்பட்டிருக்கும். (கதிர் சுமக்க உதவும் இந்தக் கூடைகளை இக்கால உழவர் சாட்டுக்கூடை என்று வழங்குகின்றனர்) அங்குக் கலப்பையும் சார்த்தப்பட்டிருக்கும். அங்கே கொட்டில் (சமையல்கூடம்) பகுதியில் சமைக்கும் புகை வரும். அதனால் அதன் சுவர் பறைந்து போயிருக்கும். (அழுக்குப் படிந்து காணப்படும்) வீடுகள் வானில் பரவிக் கிடக்கும் மழை மேகங்கள் போல் காணப்படும். வீடுகள் கருவை என்னும் மருக்கட்டான் புல்லால் வேயப்பட்டிருக்கும். அது அழகிய குடில்கள் கொண்ட சிற்றூர்.
குறும் தாள் வரகின் குறள் அவிழ் சொன்றி
புகர் இணர் வேங்கை வீ கண்டு அன்ன
அவரை வான் புழுக்கு அட்டி பயில்வுற்று . . . .[195]
இன் சுவை மூரல் பெறுகுவிர் ஞாங்கர்
குறுந்தாள் வரகின் குறளவிழ்ச் சொன்றிப்
புகரிணர் வேங்கை வீகண் டன்ன
வவரை வான்புழுக் கட்டிப் பயில்வுற் . . . .[195]
றின்சுவை மூரற் பெறுவிர் ஞாங்கர்க்
பொருளுரை:
சமாத்து வடித்த தினைச்சோற்றில் அவரைக்காயைச் சேர்த்துச் செய்த வான்புழுக்கு (வெஜிடபிள் பிரியாணி) அச் சிற்றூரில் விருந்தாகக் கிடைக்கும். பயின்று பயின்று, சுவைத்துச் சுவைத்து இனிமையாக உண்ணும் அளவுக்குப் பெறலாம். சமைத்து வடித்த வரகஞ் சோற்றின் குறள்கள் (குறுநைகள்) அவிழ்ந்து மலர்ந்திருப்பதானது பூளாப் பூக்கள் போலத் தூய வெண்மையுடன் காணப்படும்.