பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை


திமிலர் முதலியோர் உறையும் பட்டினம்

பாடல் வரிகள்:- 320 - 336

வால் உளை புரவியொடு வட வளம் தரூஉ . . . .[320]

நாவாய் சூழ்ந்த நளி நீர் படப்பை
மாடம் ஓங்கிய மணல் மலி மறுகின்
பரதர் மலிந்த பல் வேறு தெருவின்
சிலதர் காக்கும் சேண் உயர் வரைப்பின்
நெல் உழு பகட்டொடு கறவை துன்னா . . . .[325]

மேழக தகரோடு எகினம் கொட்கும்

பொருளுரை:

நீர்ப்பெயற்று என்னும் துறைமுகத்தில் நாவாய்க் கப்பல்கள் சூழ்ந்திருந்தன. வெள்ளைக் குதிரைகள் அதில் வந்து இறங்கின. அத்துடன் வடநாட்டுச் செல்வ வளங்களும் வந்திறங்கின. அது நீர் வளம் மிக்க ஊர். அங்கே மாட மாளிகைகள் ஓங்கிய மணல் பரந்த குறுந்தெருக்கள். (பரதர் எனப்படுவோர் கப்பல் வாணிகர்) அவர்கள் வாழ்ந்த பெருந்தெருக்களில் வானளாவிய பெரும்பெரும் மாளிகைகள். அப்பகுதியில் சிலதர் என்னும் வில்லேந்திய அரசுக் காவலர்கள் காவல்பணியை மேற்கொண்டிருந்தனர். அங்கே வயலை உழுத கறவை காடுகளோ பால்மாடுகளோ இல்லை. மாறாக, சண்டையிடும் செம்மறியாட்டுக் கடாக்களும், சேவல்களும் ஏவிவிடப்பட்டுச் சுழன்று விளையாடிக் கொண்டிருந்தன. அவற்றைப் பரதர் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்

கூழ் உடை நல் இல் கொடும் பூண் மகளிர்
கொன்றை மென் சினை பனி தவழ்பவை போல்
பைம் காழ் அல்குல் நுண் துகில் நுடங்க
மால் வரை சிலம்பில் மகிழ் சிறந்து ஆலும் . . . .[330]

பீலி மஞ்ஞையின் இயலி கால
தமனிய பொன் சிலம்பு ஒலிப்ப உயர் நிலை
வான் தோய் மாடத்து வரி பந்து அசைஇ
கை புனை குறும் தொடி தத்த பைபய
முத்த வார் மணல் பொன் கழங்கு ஆடும் . . . .[335]

பட்டின மருங்கின் அசையின் முட்டு இல் . . . .[320 - 336]

பொருளுரை:

செல்வ வளம் கொழிக்கும் அங்குள்ள வானளாவிய, ஓங்கி உயர்ந்த மாடங்களில் மகளிர் வரிப்பந்து விளையாடுவர். அந்த மகளிர் இடுப்பில் மென்மையான ஆடைகளின் மேல் முத்தாரங்களைக் கோத்து அணிந்திருப்பர். கையிலே பூண் வளையலும், காலிலே தங்கச் சிலம்பும் கொண்ட அவர்கள் பொன்னணிகள் ஒலிப்ப அவர்கள் பந்தாடும்போது மலைக்காடுகளில் மகிழ்ச்சி பொங்க மயில்கள் ஆடுவது போல இருக்கும். கொன்றைப் பூக்கள் பனியில் தவழ்ந்து ஆடுவது போலவும் இருக்கும். மாடங்களில் ஓடியாடிக் கையால் தட்டி விளையாடுவது வரிப்பந்து. மணல் வெளியில் விளையாடுவது பொற்கழங்கு. முத்துக்கள் கிடக்கும் மணலில் பொன்னால் செய்த கழங்குகளைத் தூக்கிப் போட்டு விளையாடும்போது அவர்களது கைகளில் உள்ள வளையல்கள் தத்தித் தத்தி ஆடும். பந்து விளையாட்டில் சலிப்பு தோன்றும் போது கழங்கு விளையாடினர் போலும். பட்டினப் பகுதியில் ஆண்கள் கண்டு மகிழும் ஆட்டுச் சண்டை, கோழிச் சண்டை ஆகியவற்றையும், மகளிர் விளையாடும் பந்து, கழங்கு ஆட்டங்களையும் ஆசையோடு பார்த்து மகிழலாம். பசிக்கும்போது உணவை நாடிச் செல்லலாம்.