பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை


ஒதுக்குப் புற நாடுகளின் வளம்

பாடல் வரிகள்:- 363 - 371

மழை வீழ்ந்து அன்ன மா தாள் கமுகின்
புடை சூழ் தெங்கின் மு புடை திரள் காய்
ஆறு செல் வம்பலர் காய் பசி தீர . . . .[365]

சோறு அடு குழிசி இளக விழூஉம்
வீயா யாணர் வளம் கெழு பாக்கத்து

பொருளுரை:

அடுத்துப் பாக்குத் தோட்டமும், தென்னந் தோப்பும் சூழ்ந்த பாக்கத்தை அடையலாம். பாக்கு மரங்கள் அடியில் பருத்திருக்கும். மழை மேகங்கள் போல ஓங்கி உயர்ந்திருக்கும். அந்தத் தோப்புகளைச் சூழ்ந்து தென்னந் தோப்பு. அதன் தேங்காயில் மூன்று கண். அக்காய் சோறாக்கும் பானைக்குப் பக்கத்தில் விழும். தேங்காய் போட்டுச் சமைத்தால் சோறு இளகி வருமாம். அந்த வழியாகச் செல்லும் புதியவர்கள் தேங்காயும் தின்னலாம் தேங்காய்ச் சோறும் பெறலாம். பருவ காலம் என்று இல்லாமல் ஆண்டு முழுவதும் பெறப்படுவதால் தென்னையை வீயா யாணர் (அழியாத வருவாய்) என்பர்.

பல் மரம் நீள் இடை போகி நல் நகர்
விண் தோய் மாடத்து விளங்கு சுவர் உடுத்த
வாடா வள்ளியின் வளம் பல தரூஉம் . . . .[370]

நாடு பல கழிந்த பின்றை நீடு குலை . . . .[363 - 371]

பொருளுரை:

வள்ளிக் கொடி வாடக் கூடியது. வாடா வள்ளி என்பது கற்பகக் கொடி. கற்பக மரம் போல் கற்பகக் கொடியும் கற்பனை. பொன்னால் செய்யப்பட்ட கற்பகப் பூவை மகளிர் தலையில் அணிந்து கொள்வது வழக்கம். அறுகம்புல்லை வாடாவள்ளி என்றனரோ எனவும் எண்ணத் தூண்டுகிறது. இந்த வாடா வள்ளி போல் வளம் தரும் பல நாடுகளைத் தாண்டிச் செல்ல வேண்டும்.