பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை


திருவெஃகாவின் சிறப்பும் திருமால் வழிபாடும்

பாடல் வரிகள்:- 372 - 392

காந்தள் அம் சிலம்பில் களிறு படிந்து ஆங்கு
பாம்பு அணை பள்ளி அமர்ந்தோன் ஆங்கண்
வெயில் நுழைபு அறியா குயில் நுழை பொதும்பர்

பொருளுரை:

அடுத்து பொதும்பர் என்னும் அடர்காடுகள் வழியாகச் செல்ல வேண்டும். குயின் என்பது மேகம். குயின் நுழைந்து செல்ல வேண்டிய அளவுக்கு அந்த அடர்காட்டுப் பொதும்பரில் மரங்கள் ஓங்கி உயர்ந்திருக்கும். வெயில்கூட நுழைய முடியாது. பொதும்பர் மலைப்பகுதியில் இருந்தால் அதனைச் சிலம்பு என்பர். காரணம் மலை எதிரொலிக்கும். காந்தள் பூத்திருக்கும் சிலம்பில் களிறு படிந்திருப்பது போல் பாம்பணையில் திருமால் பள்ளி கொண்டிருப்பான். அவனைத் தொழுது கொண்டே மேலும் செல்லலாம். (இப்போதுள்ள சின்ன காஞ்சி வரதராசப் பெருமாள்) காந்தள் மலர் படம் விரித்திருக்கும் நாகத்துக்கும், களிறு கரியநிறத் திருமாலுக்கும் உவமை.

குறும் கால் காஞ்சி சுற்றிய நெடும் கொடி . . . .[375]

பாசிலை குருகின் புன் புற வரி பூ
கார் அகல் கூவியர் பாகொடு பிடித்த
இழை சூழ் வட்டம் பால் கலந்தவை போல்
நிழல் தாழ் வார் மணல் நீர் முகத்து உறைப்ப
புனல் கால்கழீஇய பொழில்தொறும் திரள் கால் . . . .[380]

சோலை கமுகின் சூல் வயிற்று அன்ன
நீல பை குடம் தொலைச்சி நாளும்
பெரு மகிழ் இருக்கை மரீஇ சிறு கோட்டு

பொருளுரை:

பருத்த அடிமரத்தைக் கொண்டது காஞ்சிமரம். பச்சையான இலைகளையுடைய குருகுக் கொடி அம்மரத்தைச் சுற்றிக்கொண்டு படரும். பூத்திருக்கும் அப்பூவிதழின் அடிப்பகுதியில் வரிகள் காணப்படும். (மாதவிக் கொடியொடு குருகுக்கொடி ஒப்புமை உடையது) (குருகுக்கொடி காஞ்சி மரத்தைச் சுற்றிக் கொண்டிருப்பது போல் கையைச் சுற்றிக் கொண்டிருக்கும் வளையலும் குருகு எனப்பட்டது) குருகு சுற்றிய காஞ்சியின் நிழலானது மணலில் தேங்கியிருக்கும் நீரில் விழும். அந்த நிழலினைப் போலக் கூவியர் சுடும் வட்டம் (அப்பம்) இருக்கும். சுட்ட வட்ட-அப்பத்தை அவர்கள் பாலில் கலந்து தருவார்கள். காரகல் என்னும் கருமையான வடையைச் சட்டியில் திரியிழையாகச் சுற்றி வட்டம் சுடுவார்கள். (இக்காலத்து ஜாங்கிரி போன்றது அக்காலத்து வட்டம் என்னும் பண்ணியம்.) காஞ்சி மகிழ்ச்சிப் பூங்காவில் இப்பண்ணியம் (பலகாரம்) பெறலாம். பொழில்களில் புனல் பாய்ந்து மரத்தின் கால்களைக் கழுவிச் செல்லும். பொழிலில் வைத்திருக்கும் நீலப் பைங்குடங்கள் பாக்கு மரத்தின் பாளை கருவுற்றிருப்பது போல் இருக்கும். நீலம் என்னும் கள் வகையைக் கொண்டிருப்பது நீலப் பைங்குடம். இந்தக் குடத்தைத் தொலைச்சலாம், அதாவது முற்றிலுமாகப் பருகலாம். இந்தப் பகுதியைப் பெருமகிழ் இருக்கை என்பர். (பெருமகழ்ச்சி தரும் இருப்பிடம்) இந்த இருப்பிடங்களை மருவிக்கொண்டு (பயன்படுத்திக் கொண்டு) செல்லலாம்.

குழவி திங்கள் கோள் நேர்ந்து ஆங்கு
சுறவு வாய் அமைத்த சுரும்பு சூழ் சுடர் நுதல் . . . .[385]

நறவு பெயர்த்து அமர்த்த நல் எழில் மழை கண்
மடவரல் மகளிரொடு பகல் விளையாடி

பொருளுரை:

மடவரல் என்போர் மடப்பத் தன்மை கொண்ட பருவம் எய்தாத இளம்பெண்கள். அவர்கள் இளநிலாவின் கோண் வளைவைப் போன்ற நெற்றியைக் கொண்டவர்கள். சுறவு என்னும் கரும்பாம்பின் வாயிலிருந்து வெளிவருவது போல் கூந்தலில் வண்டு மொய்க்க மலரும் நெற்றியைக் கொண்டவர்கள். நாவுக்கு இன்பம் தரும் நறவு என்னும் தேனைப் பிழிந்து வைத்தாற் போன்று கண்ணுக்கு இன்பம் தரும் கட்டழகு எழிலாக வாய்க்கப் பெற்றவர்கள். மழை போன்ற அவர்களது ஈரக் கண்களில் மடப்பத் தன்மை காணப்படும். பகலெல்லாம் இவர்களோடு விளையாடிக் கொண்டே செல்லலாம்.

பெறற்கு அரும் தொல் சீர் துறக்கம் ஏய்க்கும்
பொய்யா மரபின் பூ மலி பெரும் துறை
செவ்வி கொள்பவரோடு அசைஇ அ வயின் . . . .[390]

அரும் திறல் கடவுள் வாழ்த்தி சிறிது நும்
கரும் கோட்டு இன் இயம் இயக்கினிர் கழிமின் . . . .[372 - 392]

பொருளுரை:

வேனில் விழாதான் பூமலி பெருந்துறைச் செவ்வி என்று போற்றப்படுகிறது. (சிலப்பதிகாரம் போற்றும் இந்திர விழா போன்றது காஞ்சியில் நடைபெற்ற திருமாலின் திருவிழா) துறக்கம் என்னும் சுவர்க்கம் பழமைச் சிறப்பினை உடையது. அதனைப் பெறுவதென்பது இயலாத ஒன்று. துறக்கம் என்பது பொய்மை. (காஞ்சி வேனில் விழா பெற்று மகிழக்கூடிய துறக்கம்.) உண்மையில் பொய்யாத மரபினைக் கொண்டு மண்ணுலகில் இருக்கும் துறக்கந்தான் வேனில் காலமும் அதில் கொண்டாடப்படும் விழாவும். காஞ்சியில் இந்த விழா நடைபெறும். இந்த விழாவைக் கொண்டாடுபவர்களோடு சேர்ந்து நீங்களும் கொண்டாடிக்கொண்டு அங்குச் சிலநாள் தங்குங்கள். அக்காலத்தில் கடவுளை (இந்திரன், காமன்) வாழ்த்திப் பாடுங்கள். \உங்களிடம் உள்ள கருங்கோட்டு இனிய யாழை மீட்டிக் கொண்டே பாடுங்கள். இனிய இசைக் கருவிகளையம் சேர்த்து இசைத்துக்கொண்டே பாடுங்கள். பின் உங்களின் குறியிடம் நோக்கி வழிமேற் செல்லுங்கள்.