பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை

வலைஞர் குடியில் பெறும் உணவு
பாடல் வரிகள்:- 275 - 282
மலர் வாய் பிழாவில் புலர ஆற்றி
பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும்
பூம் புற நல் அடை அளைஇ தேம் பட
எல்லையும் இரவும் இரு முறை கழிப்பி
வல் வாய் சாடியின் வழைச்சு அற விளைந்த . . . .[280]
வெம் நீர் அரியல் விரல் அலை நறும் பிழி
தண் மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர் . . . .[275 - 282]
மலர்வாய்ப் பிழாவிற் புலர வாற்றிப்
பாம்புறை புற்றிற் குரும்பி யேய்க்கும்
பூம்புற நல்லடை யளைஇத் தேம்பட
வெல்லையு மிரவு மிருமறை கழிப்பி
வல்வாய்ச் சாடியின் வழைச்சற விளைந்த . . . .[280]
வெந்நீர ரரியல் விரலலை நறும்பிழி
தண்மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர்
பொருளுரை:
பொங்கல், அடை, அரியல்கள், மீன்சூட்டு வறுவல் போன்றவை குளக்கரை மீனவர் தரும் விருந்து. அரிசியை சுவைத்து மெல்ல வேண்டிய நிலை இல்லாமல் களி போல் கிண்டப்பட்ட பொங்கல் சோறு கிடைக்கும். மலர்ந்த வாயினைக் கொண்ட பிழா என்னும் வட்டிலில் புலரும்படி ஆற்றிப் படைப்பார்கள். அத்துடன் அடை என்னும் பலகார வகைகளையும் படைப்பார்கள். அந்த அடை பாம்பு வாழும் புற்றில் மலர்ந்திருக்கும் கறையான் அடை போல் மொது மொதுவென உப்பியிருக்கும். அடையில் தேன் போன்ற இனிப்புப் பொருள்களை ஊற்றித் தருவார்கள். காலை வேளையிலும் இரவு வரும் வேளையிலும் இரண்டு முறை அந்த விருந்து படைக்கப்படும். அதன்பின் அரியல் பிழியைச் சுடச்சுடத் தருவார்கள். விரல் விட்டு நன்றாகக் கலக்கி நாவில் சுடாத பதம் பார்த்துத் தருவார்கள். அரியலானது வலிமையான சாடியில் வழவழப்பு இல்லாமல் நன்றாக விளையும் வரையில் காய்ச்சப்பட்டது. (இதனை இக்காலத்தில் தரப்படும் சூப் போன்றது எனலாம்.) இதனைப் பருகும்போது துணை உணவாகக் கொள்வதற்காக வறுவல் மீனை ஆற வைத்துத் தருவார்கள்.