பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை

நெல் விளைதற் சிறப்பு
பாடல் வரிகள்:- 213 - 227
கள் கமழ் புது பூ முனையின் முள் சினை
முகை சூழ் தகட்ட பிறழ் வாய் முள்ளி . . . .[215]
கொடும் கால் மா மலர் கொய்துகொண்டு அவண
பஞ்சாய் கோரை பல்லின் சவட்டி
புணர் நார் பெய்த புனைவு இன் கண்ணி
ஈர் உடை இரும் தலை ஆர சூடி
பொன் காண் கட்டளை கடுப்ப கண்பின் . . . .[220]
புன் காய் சுண்ணம் புடைத்த மார்பின்
இரும்பு வடித்து அன்ன மடியா மென் தோல்
கரும் கை வினைஞர் காதல் அம் சிறாஅர்
பழம் சோற்று அமலை முனைஇ வரம்பில்
கள் கமழ் புது பூ முனையின் முள் சினை
முகை சூழ் தகட்ட பிறழ் வாய் முள்ளி . . . .[215]
கொடும் கால் மா மலர் கொய்துகொண்டு அவண
பஞ்சாய் கோரை பல்லின் சவட்டி
புணர் நார் பெய்த புனைவு இன் கண்ணி
ஈர் உடை இரும் தலை ஆர சூடி
பொன் காண் கட்டளை கடுப்ப கண்பின் . . . .[220]
புன் காய் சுண்ணம் புடைத்த மார்பின்
இரும்பு வடித்து அன்ன மடியா மென் தோல்
கரும் கை வினைஞர் காதல் அம் சிறாஅர்
பழம் சோற்று அமலை முனைஇ வரம்பில்
பொருளுரை:
அடுத்து கொல்லர் குடியிருப்புகளுடன் கூடிய நன்செய் உழவர் வாழும் இடங்களைக் கடந்து செல்ல வேண்டும். அந்த உழவர் வீட்டில் பழைய சோறு அருந்தலாம். நீர்நிலம் சண்டையிட்டுக்கொள்ளும் எருமை மிதித்துச் சேறாகும். அங்கு உழவு செய்யாமல் உழவர் பயிரிடுவர். காலால் மிதிக்கும் துருத்தியால் ஊதும் உலைக்களம் கொண்டவன் கொல்லன். அவன் கொடிறு (கொரடு) போல் கைகளை உடைய நண்டு. அதன் வளை சிதையும்படி காரேறு என்று சொல்லக்கூடிய எருமை சேற்று நிலத்தில் சண்டையிட்டுக்கொள்ளும். அப்போது அங்கு வளர்ந்துள்ள பைஞ்சாய் (பாய் நெய்ய உதவும் கோரை) என்னும் கோரைகளும் மிதிபட்டு மடியும். எருமை கொம்பாலும் சேற்றைக் கிண்டும். உழாமலேயே இப்படிச் சேறுபட்ட வயலை நிரவி உழவுத் தொழிலாளர்கள் நாற்று முடியைப் பிரித்துப் பயிர் நடுவார்கள். உழவர் பின்னர் களை பறிப்பார்கள். அப்போது பூத்திருக்கும் நெய்தல் கொடிகளைக் களைந்து எறிவார்கள். அதிலுள்ள பூக்களைப் பறித்து உழவர்களின் சிறுவர்களும் சிறுமியர்களும் தலையில் சூடிக் கொள்வார்கள். இந்தப் பூக்கள் வேண்டாமென்றால் முள்ளிப் பூக்களைப் பறித்துச் சூடிக் கொள்வர். (முள்ளி என்பது ரோஜா போன்றதொரு செடி) முள்ளிச் செடியின் சிறு கிளையில் முள் இருக்கும். அதன் இதழ்கள் தகடுபோல் சூழ்ந்திருக்கும். இதழானது பிறண்டு முறுக்கிக் கொண்டிருக்கும். காம்பு வளைந்திருக்கும். பூ சற்றே பெரிதாக இருக்கும். இவற்றைக் கொய்துகொண்டு விளையாடுவர். விரும்பினால் நாரில் பூக்களைக் கண்ணியாகக் கட்டித் தலையில் சூடிக்கொள்வர். நீரில் விளையாடி ஈரம் பட்டிருக்கும் தலையில் சூடிக்கொள்வர். முள்ளிப் பூக்களைப் பறிக்கும்போது அங்கே இருக்கும் பைஞ்சாய் என்னும் ஒருவகைக் கோரைப் புல்லைப் பிடுங்கி வாய் மணக்க மென்றுகொண்டிருப்பர். (இக்காலத்தில் சுவிங்கம் செல்லுவது போல் மெல்லுவர்) வண்ணப் பொடிகள் தூவப்பட்டிருக்கும் அவர்களின் மார்பானது தங்கம் உரசிய கட்டளைக் கல்லைப் போலக் காணப்படும். அவர்களின் மேனியிலுள்ள தோல் மென்மையாக இருக்கும். இவர்களின் பெற்றோர் வினைஞர். (உழவுத் தொழிலாளிகள்) இவர்களது கைகள் இரும்பால் வடித்தது போல் வலிமையாக இருக்கும். இவர்களின் அன்புச் செல்வர்கள் தாம் இப்படி விளையாடுவர். தண்ணீர் ஊற்றி வைத்த பழைய சோற்றை உண்பதில் இவர்கள் முனைந்து நிற்பர். அவர்கள் பழஞ்சோற்றை உங்களுக்கு வழங்குவர்.
அவல் எறி உலக்கை பாடு விறந்து அயல
கொடு வாய் கிள்ளை படு பகை வெரூஉம் . . . .[213 - 227]
லவலெறி யுலக்கைப் பாடுவிறந் தயல
கொடுவாய்க் கிள்ளை படுபகை வெரூஉம்
பொருளுரை:
கவிந்திருக்கும் குடைபோன்ற உழவரின் குடில்கள் புதிய வைக்கோலால் வேயப்பட்டிருக்கும். அக் குடில் முற்றத்தில் உழத்தியர் அவல் இடிப்பர். அந்த ஒலியைக் கேட்டுப் பக்கத்தில் மேயும் கிளிகள் பறந்தோடும்.