பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை


குறிஞ்சி நில மக்களின் இயல்பும் தொழிலும்

பாடல் வரிகள்:- 134 - 147

யானை தாக்கினும் அரவு மேல் செலினும்
நீல் நிற விசும்பின் வல் ஏறு சிலைப்பினும் . . . .[135]

சூல் மகள் மாறா மறம் பூண் வாழ்க்கை
வலி கூட்டுணவின் வாள் குடி பிறந்த
புலி போத்து அன்ன புல் அணல் காளை
செல்நாய் அன்ன கரு வில் சுற்றமொடு
கேளா மன்னர் கடி புலம் புக்கு . . . .[140]

நாள் ஆ தந்து நறவு நொடை தொலைச்சி
இல் அடு கள் இன் தோப்பி பருகி
மல்லல் மன்றத்து மத விடை கெண்டி
மடி வாய் தண்ணுமை நடுவண் சிலைப்ப
சிலை நவில் எறுழ் தோள் ஓச்சி வலன் வளையூஉ . . . .[145]

பகல் மகிழ் தூங்கும் தூங்கா இருக்கை
முரண் தலை கழிந்த பின்றை மறிய . . . .[134 - 147]

பொருளுரை:

அடுத்து மறவர் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டே செல்லலாம். மறவர்கள் தம் தாய் வயிற்றில் இருக்கும்போதே அஞ்சா நெஞ்ச மறம் படைத்தவர்கள். யானை தாக்க வந்தாலும், பாம்பு தன்மீது ஏறிச் சென்றாலும், மேக மூட்டம் இல்லாத வானில் இடி முழக்கம் கேட்டாலும் நிறை மாதத் தாய்மார்கூடக் கலங்குவதில்லை. (இடி இடிக்கும்போது கருப்பிணிகள் வெளியே வரக்கூடாது என்று இக்காலத்தில்கூடச் சொல்லப்படுகிறது.) (மேகமூட்டம் இல்லாத வானில் இடிமுழக்கம் கேட்டது பிக்பாங் தியரி ஒலியின் எச்ச மிச்சம் கேட்டிருக்குமோ என்று எண்ணிப் பார்க்கத் தூண்டுகிறது.) மறவர் வாட்குடியில் பிறந்தவர்கள். அது வலிகூட்டுண்ணும் வாட்குடி. உடல் வலிமையைக் கொண்டு உணவைப் பெறுவது வலிகூட்டுண்ணல். அவர்கள் இளந்தாடிக் காளையர். புலிக்குட்டியைப் போல வலிய போருக்குச் செல்வார்கள். செந்நாய் போலச் சுற்றத்தாரோடு கூட்டமாகச் செல்வார்கள். வலிமை மிக்க வில்லோடு செல்வார்கள். தன்னுடைய நாட்டு மன்னன் சொன்னதைக் கேளாத பகை மன்னன் காப்பாற்றிக் கொண்டிருக்கும் நாட்டுக்குச் செல்வார்கள். பட்டப் பகலில் அந்நாட்டுப் பசுக்கூட்டங்களைக் கவர்ந்து ஓட்டிக் கொண்டு வருவார்கள். தன் ஊருக்கு வந்ததும் நறவுக்கள் குடிப்பதற்காக அவற்றை விலையாகத் தருவார்கள். வீட்டுக்கு வந்து வீட்டிலே காய்ச்சிய தோப்பி என்னும் கள்ளைப் பருகுவார்கள். (நறவு = பழச்சாற்றிலிருந்து செய்யப்பட்ட கள். தோப்பி = சோற்றுக் கஞ்சியைப் புளிக்க வைத்துச் செய்த கள்.) பின்னர் மற்போர் புரியும் பொதுமன்றத்துக்கு வருவார்கள். தன் உடல் வலிமையைக் காட்டி மற்போர் புரிந்து விளையாடுவார்கள். அதில் சலிப்பு தோன்றும்போது கொழுத்த காளைகளைத் தூண்டி விட்டுத் தம் தோள் வலிமையைக் காட்டி அடக்கி விளையாடுவார்கள். காளையோடு விளையாடும்போது வாயை மடித்து வீளை (விசில்) அடிப்பார்கள். தண்ணுமை மேளத்தையும் அப்போது முழக்குவர். காளைகளை வளைத்து வென்றவண்ணம் நாள் முழுவதும் விளையாடுவார்கள். அங்குச் சோம்பிக் கிடந்து தூங்கி வழிபவர்கள் யாருமே இல்லாத்தால் அவர்களது இருப்பிடம் தூங்கா இருக்கையாகக் காணப்பட்டது. இப்படிப்பட்ட போர்பயிற்சிக் கூடத்தைப் (முரண் தலையைப்) பார்த்துக் கொண்டே செல்லலாம்.