பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை


நீர்ப்பெயற்று என்னும் ஊரின் சிறப்பு

பாடல் வரிகள்:- 311 - 319

வண்டல் ஆயமொடு உண்துறை தலைஇ
புனல் ஆடு மகளிர் இட்ட பொலம் குழை
இரை தேர் மணி சிரல் இரை செத்து எறிந்தென
புள் ஆர் பெண்ணை புலம்பு மடல் செல்லாது
கேள்வி அந்தணர் அரும் கடன் இறுத்த . . . .[315]

வேள்வி தூணத்து அசைஇ யவனர்
ஓதிம விளக்கின் உயர் மிசை கொண்ட
வைகுறு மீனின் பைபய தோன்றும்
நீர்பெயற்று எல்லை போகி பால் கேழ் . . . .[311 - 319]

பொருளுரை:

நீர்ப்பெயற்று என்பது ஓர் ஊர். அவ்வூரிலுள்ள துறையின் புனலில் விளையாடும் மகளிர் விளையாட்டுத் தோழிமாரோடு சேர்ந்து தழுவிக் கொண்டு நீர்த்துறைக்குள்ளே வண்டல் விளையாடி மகிழ்வர். தண்ணீருக்குள் விளையாடும்போது அவர்கள் தங்களது தங்க நகைகளைக் கழற்றிக் கரைகளிலேயே வைத்து விட்டு விளையாடுவர். மணிச்சிரல் என்பது சிச்சிலி என்றும் சொல்லப்படும் அழகிய மீன்கொத்திக் குருவி. கரையில் தங்க நகைகளைப் பார்த்த மீன்கொத்திக் குருவி தனக்கு நல்ல தங்கமீன் இரை கிட்டியது என்று எண்ணி அதன்மீது பாயும். அவை இரை அன்மையால் மருண்டு போய் பக்கத்தில் பல பறவைகள் இருக்கும் புன்னைமர மடலில்கூட உட்காராமல் நெடுந்தூரம் பறந்து செல்லும். அங்கே ஊர்ப் பகுதியில் அந்தணர்கள் வேள்வித் தூண் நட்டு வேதம் ஓதித் தம் கடமைகளைச் செய்துகொண்டிருப்பர். அவர்களின் வேதம் எழுதப் படாதது. வழிவழியாகக் காதால் கேட்டு ஓதப்படுவது. பறந்து சென்ற மீன்கொத்திப் பறவை அவர்கள் நட்ட வேள்வித் தூணின்மேல் சிறிது நேரம் உட்காரும். அது உட்கார்திருப்பதிருப்பதானது அன்ன-விளக்கு போல் தோன்றும். அன்னப் பறவை பொம்மையை உச்சியில் வைத்துச் செய்த குத்து விளக்கை அக்காலத்தில் யவனர் கொண்டுவந்து தமிழ்நாட்டில் வாணிகம் செய்தனர். வேள்வித் தூணின்மேல் மீன்கொத்திப் பறவை அமர்ந்திருப்பது யவனர் தந்த ஓதிம (அன்ன) விளக்கைப் போலத் தோன்றும். அந்தணர் மிகுதியாக வாழ்ந்த அந்த நீர்ப்பெயற்று ஊரைத் தாண்டிச் செல்ல வேண்டும். கடல்மல்லை என்று போற்றப்படும் மாமல்லபுரம் நீர்ப்பெயற்று என்னும் பெயருடன் விளங்கியது. நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி என்னும் போது முந்நீர் என்னும் தொடரிலுள்ள ‘நீர்’ என்பது கடலை உணர்த்துகிறது. நீர் = கடல். நீர்ப்பெயற்று = கடல்மல்லை நீரின் பெயரைக் கொண்ட பட்டினத்தைப் புலவர் நீர்ப்பெயற்று என்று குறிப்பிடுகிறார். இது எயிற் பட்டினத்தைச் சிறுபாணாற்றுப்படை மதிலொடு பெயரிய … பட்டினம் என்று குறிப்பிடுவது போன்றது.