பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை


எயிற்றியர் அளிக்கும் உணவு

பாடல் வரிகள்:- 095 - 105

பார்வை யாத்த பறை தாள் விளவின் . . . .[95]
நீழல் முன்றில் நில உரல் பெய்து
குறும் காழ் உலக்கை ஓச்சி நெடும் கிணற்று
வல் ஊற்று உவரி தோண்டி தொல்லை
முரவு வாய் குழிசி முரி அடுப்பு ஏற்றி
வாராது அட்ட வாடூன் புழுக்கல் . . . .[100]

வாடா தும்பை வயவர் பெருமகன்
ஓடா தானை ஒண் தொழில் கழல் கால்
செ வரை நாடன் சென்னியம் எனினே
தெய்வ மடையின் தேக்கு இலை குவைஇ நும்
பை தீர் கடும்பொடு பதம் மிக பெறுகுவிர் . . . .[95 - 105]

பொருளுரை:

நீண்ட அடிமரத்தையுடைய இலவ மரத்தின் கிளைகளில் பூளாப்பூ நிறத்தில் பஞ்சு வெடித்திருக்கும் பச்சைக் காயினைப் போல் முதுகினை உடையது அணில். கருப்பை எனப்படும் வெள்ளெலியும் அப்படித்தான் இருக்கும். அணிலும் வெள்ளெலியும் அங்கே விளையாடுவதும் உண்டு. விளையாடாமல் போய் விடுவதும் உண்டு. பாலை நிலத்துப் பெண்கள் எயிற்றியர் எனப்படுவர். எயிற்றியர் குரம்பை அவர்கள் குரம்பை எனப்படும் கூரைக்குடிசை வீடுகளில் வாழ்ந்தனர். குடிசை ஈச்சமர இலைமடல்களால் வேயப்பட்டிருந்தது. எயிற்றி மான்தோலை விரித்துப் படுத்திருப்பாள். தகர் எயிற்றிக்குப் பக்கத்தில் குட்டி போட்டிருக்கும் செம்மறி ஆடு முடங்கிக் கிடக்கும். அந்தப் பெண்ணாட்டை விட்டுவிட்டு ஆண்ஆடு [தகர்] மேயச் செல்வது உண்டு. அந்தத் தகர் ஆட்டுக்கு ஆற்றின் மணல்படிவு போல் அலையலையாய்ப் படிந்த மயிர். கொழுத்த மடல்போல் காது. வேலின் தலைப்பகுதியைப் போலக் கூர்மையான கொம்புகள் - இருந்தன. எயிற்றி பணி எயிற்றியும் தன் பணியை மேற்கொள்ள வெளியே சென்றாள். இரும்பினால் செய்யப்பட்ட அம்பை நுனியில் செருகிய கோல் ஒன்றை எயிற்றி கையில் வைத்திருந்தாள். கரம்பை நிலத்தை (கரட்டு நிலத்தை) அக்கோலின் உளிவாயிலிலுள்ள கூரால் புழுதி பறக்கக் கிண்டினாள். பல் வெளுக்கும் புல் அந்தக் கரம்பை நிலத்துப் புழுதியில் முளைத்திருந்த ஒருவகைப் புல்லை எயிற்றியர் தம் வாயில் அடக்கியிருந்தனர். அது அவர்களது பல்லை வெண்மை பெறச்செய்து பாதுகாத்தது. (சுரை = சூரி, கூர்மை) எயிற்றி சமையல் பின்னர் தன் குடிசைக்கு வந்து சமைக்கத் தொடங்கினாள். முற்றத்தில் விளாமரத்து நிழல். அங்கே நிலப்பாறையில் அமைந்திருந்த உரல். அதில் நெல்லைப் போட்டு உலக்கையால் குற்றி அரிசி யாக்கினாள். அந்த மர நிழலின் ஒரு பக்கத்தில் பார்வை வலை விரிக்கப்பட்டிருந்தது. அந்த வலையில் விழுந்த பறவையையும் பக்குவம் செய்து சமைத்தாள். நீண்ட வானிக்கிணறு. அதனைத் தோண்டி முகந்த ஊற்றுநீரில் உலை வைத்தாள். முரமுரப்பான வாயையுடைய பழைய பானை. அதனை விறகடுப்பில் ஏற்றினாள். (அரிசி ஒன்று வெந்தும் ஒன்று வேகாமலும் இருந்தால் அது வாரம் பட்ட புழுக்கல். புலவு, அரிசி ஆகிய இரண்டில் ஒன்று வெந்தும் மற்றொன்று வேகாமலும் இருந்தால் அதுவும் வாரம்பட்ட புழுக்கல். எல்லாம் பக்குவமாக வெந்திருந்தால் அது வாராது அட்ட வாடூன் புழுக்கல்.) இப்படி வாராது அட்ட வாடூன் புழுக்கலை (= பிரியாணியை) எயிற்றி தேக்கு இலையில் படைத்து விருந்தூட்டினாள். அது தெய்வ மடை (அமிழ்தம்) போன்றது. அன்று அவள் எங்களுக்கு அதனை வழங்கினாள். இன்று உங்களுக்கும் அதனை வழங்குவாள். நீங்கள் செய்யவேண்டியது அரசனை வாழ்த்தல் நீங்கள் அரசனைப் போற்றிப் புகழ வேண்டியதில்லை. அரசன் பெயரைச் சொன்னால் போதும். அவன் தும்பைப்பூ வாடாமல் போரில் முன்னேறும் வயவர் படையின் தலைவன். மற்றும் புறமுதுகிட்டு ஓடாத பெரும் படையையும் உடையவன். இத்தகைய போர்த்தொழிலில் சிறந்த கழலை அவன் காலிலே அணிந்தவன். அவன் செவ்வரை நாடன் (செந்நிழல் தந்து நாட்டைக் காக்கும் தலைவன்.) நாங்கள் அவன் சென்னியம் (நாங்கள் அவனை எண்ணித் தலைமேற் கொண்டு வந்துள்ளோம்.) என்று சொன்னாலே போதுமானது. மேலே சொன்னவாறு விருந்தினைப் பெறுவீர்கள்.