மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

மதுரைக்காஞ்சி


இரவில் மன்னன் துயில் கொள்ளும் நிலை

பாடல் வரிகள்:- 700 - 714

சினைதலை மணந்த சுரும்புபடு செந்தீ . . . .[700]

ஒண்பூம் பிண்டி அவிழ்ந்த காவிற் சுடர்பொழிந்
தேறிய விளங்குகதிர் ஞாயிற்று இலங்குகதி
ரிளவெயிற் றோன்றி யன்ன
தமனியம் வளைஇய தாவில் விளங்கிழை
நிலம்விளக் குறுப்ப மேதகப் பொலிந்து . . . .[705]

மயிலோ ரன்ன சாயல் மாவின்
தளிரே ரன்ன மேனித் தளிர்ப்புறத்து
ஈர்க்கி னரும்பிய திதலையர் கூரெயிற்
றொண்குழை புணரிய வண்டாழ் காதிற்
கடவுட் கயத்தமன்ற சுடரிதழ்த் தாமரைத் . . . .[710]

தாதுபடு பெரும்போது புரையும் வாண்முகத்
தாய்தொடி மகளிர் நறுந்தோள் புணர்ந்து
கோதையிற் பொலிந்த சேக்கைத் துஞ்சித்
திருந்துதுயில் எடுப்ப இனிதி னெழுந்து . . . .[700 - 714]

பொருளுரை:

நெடுஞ்செழியன் மகளிரைத் தழுவிக்கொண்டு அவர்களது கூந்தல் மெத்தையில் துயின்றான். அவனை எழுப்பினர். இனிமையாக எழுந்தான். புத்துணர்வு பெற்று எழுந்தான். (திருந்துயில் = புத்துணர்வு) வண்டுகள் மொய்த்துக் கொண்டிருக்கையில் செந்தீ போன்று அசோக மலர் மலரும் காட்டில் இளவெயில் பட்டு எழுவது போல் எழுந்தான். அவன் தழுவிய மகளிர் பொன்னை வளைத்து எந்தக் குறைபாடும் இல்லாமல் செய்யப்பட்ட அணிகலன்களோடு விளங்கினர். நிலத்துக்கே விளக்கு வைத்தாற்போல மேன்மையுடன் விளங்கினர். அவர்களின் தோற்றம் மயிலைப் போன்றது. மேனி மாந்தளிர் போன்றது. தளிரில் தெரியும் ஈர்க்கு நரம்புகள்போல் திதலை என்னும் வரிக்கோடுகள் மேனியை அழகுபடுத்தின. பற்கள் கூர்மையாகத் திகழ்ந்தன. ஒளிரும் குழைகளால் காதுகள் வளைந்து தாழ்ந்திருந்தன. அவர்கள் கோயில் குளத்தில் மலர்ந்துகொண்டிருக்கும் தாமரை போன்ற முகம் கொண்டவர்கள். தோளில் வளையல் அணிந்திருந்தனர்.