மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

மதுரைக்காஞ்சி


இரவுக் கால நிலை

பாடல் வரிகள்:- 545 - 558

ஒண்சுடர் உருப்பொளி மழுங்கச் சினந்தணிந்து . . . .[545]

சென்ற ஞாயிறு நன்பகற் கொண்டு
குடமுதற் குன்றஞ் சேரக் குணமுதல்
நாள்முதிர் மதியந் தோன்றி நிலாவிரிபு
பகலுரு வுற்ற இரவுவர நயந்தோர்

பொருளுரை:

உருப்பு ஒளி = கடும் வெயில். ஞாயிறு ஒளியும் வெயிலுமாகிய தன் சினம் தணிந்து தன் நன்பகல் பொழுதை மேலைத்திசை முதலில் சேர்த்தது. அப்போது கீழைத்திசை முதலில் 15 நாள் முதிர்ந்த மதியம் தோன்றித் தன் நிலவொளியை விரித்துப் பகல்செய்து கொண்டிருந்தது. இதனை விரும்பியவர்கள் அதன் பயனைத் துய்க்கலாயினர்.

காதல் இன்றுணை புணர்மார் ஆயிதழ்த . . . .[550]

தண்ணறுங் கழுநீர் துணைப்ப இழைபுனையூஉ
நன்னெடுங் கூந்த னறுவிரை குடைய
நரந்த மரைப்ப நறுஞ்சாந்து மறுக
மென்னூற் கலிங்கங் கமழ்புகை மடுப்பப்
பெண்மகிழ் வுற்ற பிணைநோக்கு மகளிர் . . . .[555]

நெடுஞ்சுடர் விளக்கம் கொளீஇ நெடுநகர்
எல்லை எல்லா நோயொடு புகுந்து
கல்லென் மாலை நீங்க நாணுக்கொள . . . .[545 - 558]

பொருளுரை:

மானைப் போல் மருளும் பார்வை கொண்ட மகளிர் தம் பெண்மைத் தன்மையைத் தாமே கண்டு மகிழ்ந்தனர். அதனால் தம் காதலரோடு கலந்து இன்புற விரும்பினர். அதற்காகத் தம்மை ஒப்பனை செய்துகொண்டனர். குளுமை தரும் கழுநீர்ப் பூக்களைப் பறித்துவந்து அதன் இதழ்களைத் துணைப்படுத்தி நாரால் மாலை கட்டினர். நன்கு நீண்டு வளர்ந்துள்ள கூந்தலை நீராட்டுவதற்காக நரந்தம் என்னும் மணப் பொருளை அரைத்தனர். அணியப்போகும் மெல்லிய நூலாடைக்கு நறுமணம் கமழும் புகையை ஊட்டினர். சுவர் மாடங்களில் வைக்கப்பட்டிருந்த விளக்குகளை ஏற்றினர். நெடுநகராகிய வீட்டில் பகலெல்லாம் காதலனைப் பிரிந்திருக்கும் துன்ப நோயோடு வாழ்ந்தவர்கள், இரவு வந்ததும் காதலனை எதிர்கொள்வதை விடுத்து அவன் வருகையை எண்ணியவுடன் நாணினர்.