மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

மதுரைக்காஞ்சி


மதுரையின் சிறப்பு

பாடல் வரிகள்:- 687 - 699

மைபடு பெருந்தோள் மழவ ரோட்டி
இடைப்புலத் தொழிந்த ஏந்துகோட் டியானை
பகைப்புலங் கவர்ந்த பாய்பரிப் புரவி
வேல்கோ லாக ஆள்செல நூறிக் . . . .[690]

காய்சின முன்பிற் கடுங்கட் கூளியர்
ஊர்சுடு விளக்கிற் றந்த ஆயமும்
நாடுடை நல்லெயில் அணங்குடைத் தோட்டி
நாடொறும் விளங்கக் கைதொழூஉப் பழிச்சி
நாடர வந்த விழுக்கல மனைத்தும் . . . .[695]

கங்கையம் பேரியாறு கடற்படர்ந் தாங்கு
அளந்துகடை யறியா வளங்கெழு தாரமொடு
புத்தே ளுலகம் கவினிக் காண்வர
மிக்குப்புகழ் எய்திய பெரும்பெயர் மதுரைச் . . . .[687 - 699]

பொருளுரை:

கடையெழு வள்ளல்களில் ஒருவன் தோட்டிமலை நள்ளி. இவன் தன் தோட்டிமலைக் கோட்டையை நெடுஞ்செழியன் அழிக்காமல் இருப்பதற்காக ஒவ்வொரு நாளும் விழுமிய வளங்களைக் கொண்டுவந்து தந்தான். கங்கை ஆறு கடலில் கலப்பது போல இந்த தார வளங்கள் துரையில் வந்து குவிந்தன. இந்தத் தாரச்செல்வங்கள் கங்கையாறு காவிரியில் கலப்பது போல் மதுரையில் வந்து குவிந்தன. கற்பனை உலகமாகிய வானுலகத்தைப் ‘புத்தேள் உலகம்’ என்றும் வழங்கினர். (ஆள் = ஆள்பவர். ஏ = ஏராப்பு = உயர்வு. ஏ = ஏள் = உயர் = உயர்வு உயர்ந்த இடம், ஒப்பு நோக்குக ஆ - சேய்மைச்சுட்டு (‘ஆயிடை’ - தொல்காப்பியம்) ஆனிலை உலகம். ஆ = ஆன் (‘ன்’ போலி) \ ஆ = அங்கு - அங்கு நிலைகொண்டுள்ள உலகம் ஆ = ஆன்மா ஆன்மா நிலைகொண்டுள்ள இடம்) ஆன்மா என்றால் என்ன? உனக்கு ஓர் உயிர் எனக்கு ஓர் உயிர். அவனுக்கு ஓர் உயிர். அதற்கு ஓர் உயிர் எல்லாரிடமும் எல்லாவற்றிலும் இணைந்திருக்கும் ஓர் உயிர். எல்லாவற்றிலும் இணைந்திருக்கும் இந்த ஓர் உயிர்தான் ஆன்மா.