மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

மதுரைக்காஞ்சி


உணவு வகைகள்

பாடல் வரிகள்:- 527 - 535

சேறு நாற்றமும் பலவின் சுளையும்
வேறுபடக் கவினிய தேமாங் கனியும்
பல்வே றுருவிற் காயும் பழனும்
கொண்டல் வளர்ப்பக் கொடிவிடுபு கவினி . . . .[530]

மென்பிணி யவிழ்ந்த குறுமுறி யடகும்
அமிர்தியன் றன்ன தீஞ்சேற்றுக் கடிகையும்
புகழ்படப் பண்ணிய பேரூன் சோறும்
கீழ்செல வீழ்ந்த கிழங்கொடு பிறவும்
இன்சோறு தருநர் பல்வயி னுகர . . . .[527 - 535]

பொருளுரை:

சேறு (பழ மசியல்), நாற்றம் (பத்தி சந்தனம் ஏலம் போன்ற மணப்பொருள்கள்), பலாப்பழச் சுளை, பல்வேறு உருவம் கொண்ட இனிப்பு மாம்பழங்கள், பலதிறப்பட்ட காய்கள், பழங்கள், வெற்றிலை, பாக்கு, சமைத்த உணவு வகைகள், சமைத்த கிழங்கு வகைகள், இனிப்புப் பண்டங்கள், முதலானவற்றை வாங்கி ஆங்காங்கே தின்றுகொண்டிருந்தனர். வெற்றிலை - கீழைக்காற்று வீசும்போது கொடி படர்ந்து அழகாகத் துளிர் விட்டு விரிந்துள்ள இளம் இலை, பாக்கு - கடிகை என்னும் கொட்டை நிலையில் இருந்தாலும் மெல்லும்போது சேறாகி அமிழ்தம் போல் இனிப்பது. கடைத்தெருவில் உணவுப் பண்டங்களை மக்கள் வாங்கித் தின்ற ஆரவாரப் பாங்கு எப்படியிருந்தது? சேர நாட்டில் கோதை மன்னன் வெற்றி விழா கொண்டாடியபோது அவனது நாளவையில் விழுமியோர் கூடியிருக்கையில் யாழும் இயமும் இசை கூட்டிக் கோடியர் என்னும் இசைவாணர் கூட்டம் வாழ்த்தும்போது எழும் கம்பலை ஆரவாரம் போல இருந்தது.