மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

மதுரைக்காஞ்சி


பகைவர் தேசம் பாழ்பட்ட நிலை

பாடல் வரிகள்:- 152 - 176

உறு செறுநர் புலம் புக்கவர்
கடி காவி னிலை தொலைச்சி
இழி பறியாப் பெருந்தண் பணை
குரூஉக் கொடிய எரி மேய . . . .[155]

நா டெனும் பேர் காடாக
ஆ சேந்த வழி மாசேப்ப
ஊரி ருந்த வழி பாழாக
இலங்கு வளை மட மங்கையர்
துணங்கை யஞ்சீர்த் தழூஉ மறப்ப . . . .[160]

அவை யிருந்த பெரும் பொதியிற்
கவை யடிக் கடு நோக்கத்துப்
பேய் மகளிர் பெயர் பாட
அணங்கு வழங்கு மகலாங் கண்
நிலத் தாற்றுங் குழூஉப் புதவின் . . . .[165]

அரந்தைப் பெண்டிர் இனைந்தனர் அகவக்
கொழும் பதிய குடி தேம்பச்
செழுங் கேளிர் நிழல் சேர
நெடுநகர் வீழ்ந்த கரிகுதிர்ப் பள்ளிக்
குடுமிக் கூகை குராலொடு முரலக . . . .[170]

கழுநீர் பொலிந்த கண்ணகன் பொய்கைக்
களிறுமாய் செருந்தியொடு கண்பமன் றூர்தர
நல்லேர் நடந்த நசைசால் விளைவயல்
பன்மயிர்ப் பிணவொடு கேழல் உகள
வாழா மையின் வழிதவக் கெட்டுப் . . . .[175]

பாழா யினநின் பகைவர் தேஎம் . . . .[152 - 176]

பொருளுரை:

நெடுஞ்செழிய! உன் பகைவர் நாடு பாழாயிற்று. (எப்படியெல்லாம் பாழாயிற்று என்று இங்குக் கூறப்படுகிறது.) செழியன் வலிமை மிக்க பகைவர் நாட்டுக்குள் புகுந்தான். அவர்களது காவற் காடுகளையும், வயல்களையும் எரித்தான். அதனால் அவர்களின் நாட்டுக்கு ‘நாடு’ என்னும் பேர் இல்லாமல் போய்க் ‘காடு’ என்னும் பெயர் வழங்கலாயிற்று. கறவைப் பசுக்கள் மேய்ந்த வெளிகளில் காட்டு விலங்குகள் திரிந்தன. ஊர் இருந்த இடம் பாழ் நிலமாக மாறியது. அந்த ஊர்களில் வாழும் ஒரு சிலரும் விழாக் கொண்டாடித் துணங்கை ஆடுவதையே மறந்து விட்டனர். மக்கள் கூடி மகிழ்ந்த பொதுமன்றங்களில் பேய்கள் கூத்தாடின. ‘அணங்கு’ என்னும் அழகியர் உலாவிய தெருக்களில் கணவனை இழந்த ‘அரந்தைப் பெண்டிர்’ அழுது கொண்டிருந்தனர். கொழுங்குடி மக்கள் அவர்களின் மூதாதையர் நிழலைச் சென்றடைந்தனர். (மாண்டனர்) கரிக்குதிர்ப்பள்ளி (ஒப்பு நோக்குக ‘குராப்பள்ளி’) ஓங்கி உயர்ந்த மாளிகைகளைக் கொண்ட நகரங்கள் செழியனின் அடிக்கீழ் வீழ்ந்தன. மாடங்களில் மக்கள் நடமாட்டம் இல்லை. மாறாக கூகைகளும் கோட்டான்களும் இருந்து கூவிக்கொண்டிருந்தன. கழுநீர்ப் பூக்கள் பூத்திருந்த பொய்கை காட்டு யானைகள் மேயும் செருந்திப் பூவும், கண்புப் பூவும் பூத்து வறண்டு போயிற்று. நல்லேர் பூட்டி உழுத வயல்களைக் காட்டுப் பன்றிகள் உழுது கொண்டிருந்தன. பகைவர் நாடு இப்படிப் பாழாகி மக்கள் வாழாததால் அந்த இடங்களுக்குச் செல்லும் வழித்தடங்களும் கெட்டுப் போயின.