மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
மதுரைக்காஞ்சி

காவிதி மாக்கள்
பாடல் வரிகள்:- 493 - 499
நறுஞ்சாந்து நீவிய கேழ்கிளர் அகலத்து
ஆவுதி மண்ணி அவிர்துகில் முடித்து
மாவிசும்பு வழங்கும் பெரியோர் போல . . . .[495]
நன்றுந் தீதுங் கண்டாய்ந் தடக்கி
அன்பும் அறனும் ஒழியாது காத்துப்
பழியொரீஇ யுயர்ந்து பாய்புகழ் நிறைந்த
செம்மை சான்ற காவிதி மாக்களும் . . . .[493 - 499]
ஆவுதி மண்ணி அவிர்துகில் முடித்து
மாவிசும்பு வழங்கும் பெரியோர் போல . . . .[495]
நன்றுந் தீதுங் கண்டாய்ந் தடக்கி
அன்பும் அறனும் ஒழியாது காத்துப்
பழியொரீஇ யுயர்ந்து பாய்புகழ் நிறைந்த
செம்மை சான்ற காவிதி மாக்களும் . . . .[493 - 499]
ஓசை ஒழுங்குடன் மூலப்படல்
நறுஞ்சாந்து நீவிய கேழ்கிள ரகலத்
தாவுதி மண்ணி யவிர்துகின் முடித்து
மாவிசும்பு வழங்கும் பெரியோர் போல . . . .[495]
நன்றுந் தீதுங் கண்டாய்ந் தடக்கி
யன்பு மறனு மொழியாது காத்துப்
பழியோரீஇ யுயர்ந்து பாய்புகழ் நிறைந்த
செம்மை சான்ற காவிதி மாக்களு
தாவுதி மண்ணி யவிர்துகின் முடித்து
மாவிசும்பு வழங்கும் பெரியோர் போல . . . .[495]
நன்றுந் தீதுங் கண்டாய்ந் தடக்கி
யன்பு மறனு மொழியாது காத்துப்
பழியோரீஇ யுயர்ந்து பாய்புகழ் நிறைந்த
செம்மை சான்ற காவிதி மாக்களு
பொருளுரை:
‘காவிதி’ என்னும் விருது சிறந்த உழவருக்கு வழங்கப்பட்டது என்பது ஆன்றோர் முடிபு. அரசனின் நாளவையில் இவர்களுக்குச் சிறப்பிடம் தரப்பட்டிருந்ததை இப் பாடற்பகுதி உணர்த்துகின்றது. அறங்கூறுவதில் காவிதிகளின் கருத்தும் கேட்டறியப்பட்டது. மாவிசும்பு வழங்கும் பெரியோர் வேள்வி செய்து தம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்வர். தூய ஆடை உடுத்தியிருப்பர். மார்பிலே சந்தனம் பூசியிருப்பர். காவிதிகளும் அப் பெரியோர் போன்ற கோலம் கொண்டிருந்தனர். நன்றும் தீதும் கண்டறிந்து அடக்கத்துடன் இவர்கள் வாழ்ந்தனர். பிறரிடம் அன்பைப் பொழிவதோடு நன்னிலையில் அறநெறியையும் பூண்டு மற்றவர்களையும் அறநெறியில் ஒழுகப் பண்ணிக் காத்துவாழ்ந்தனர். பழி வராவண்ணம் தம்மைப் பாதுகாத்துக் கொண்டனர். மேலான புகழோடு சிறப்பாகவும் செம்மையாகவும் வாழ்ந்துவந்தனர்.
பாடல் வரிகள்: