மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

மதுரைக்காஞ்சி


அந்திக் கடையில் எழும் ஓசை மிகுதி

பாடல் வரிகள்:- 536 - 544

வாலிதை எடுத்த வளிதரு வங்கம்
பல்வேறு பண்ட மிழிதரும் பட்டினத்
தொல்லென் இமிழிசை மானக் கல்லென
நனந்தலை வினைஞர் கலங்கொண்டு மறுகப்
பெருங்கடற் குட்டத்துப் புலவுத்திரை யோதம . . . .[540]

இருங்கழி மருவிப் பாயப் பெரிதெழுந்து
உருகெழு பானாள் வருவன பெயர்தலிற்
பல்வேறு புள்ளின் இசையெழுந் தற்றே
அல்லங் காடி அழிதரு கம்பலை . . . .[536 - 544]

பொருளுரை:

கடலலையானது கழிமுகத்தில் பாய்ந்து தழுவிவிட்டுத் திரும்பும்போது ஒதுக்கிய இரைகளைத் தின்ற பறவைகள் மாலைநேரம் வந்ததும் இருப்பிடத்துக்குத் திரும்பும்போது தம் இனத்தைச் சேர்ந்த மற்ற பறவைகள் ஒன்று திரள்வதற்காக ஒலி எழுப்புவது போல, மாலைநேரக் கடைகளில் ஆரவாரம் மிகுந்தது. பானாள் = பால் நாள் = பாதி நாள் (‘பானாள் கங்குல்’ என்னும்போது இரவாகிய கங்குலில் பாதிநாள். அதாவது நள்ளிரவாகிய யாமம்). தெருக்கடை நாளங்காடி போய் அல்லங்காடிக்குப் பொருள்களைக் கொண்டுவந்து சேர்ப்பவர்களின் நிலை எப்படி இருந்தது? கடலலை கழித்துறையில் கடற்பொருட்களை ஒதுக்கிவிட்டுத் தரைப்பொருட்களை எடுத்துச் செல்வது போல் இருந்தது. வால் இதை = வலிமை மிக்க பாய்மரம் (ஒப்பு நோக்கி இணைத்துக் கொள்க; திருக்குறள் ‘வாலறிவன்’ - வாலறிவு = வலிமை மிக்க இறிவு). காவிரிப்பூம்பட்டினத்தில் காற்றால் செலுத்தப்படும் பாய்மரக் கப்பல்களிலிருந்து பல்வேறு பண்டங்களை இறக்குமதி செய்யும்போது எழுப்பப்படும் மகிழ்ச்சி ஆரவாரம் போலவும் அல்லங்காடி கம்பலை இருந்தது.