மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
மதுரைக்காஞ்சி

முதுவெள்ளிலை என்னும் ஊரின் சிறப்பு
பாடல் வரிகள்:- 106 - 119
கல் காயுங் கடுவேனி லொடு
இரு வானம் பெயலொ ளிப்பினும்
வரும் வைகல் மீன் பிறழினும்
வெள்ளமா றாது விளையுள் பெருக
நெல்லி னோதை அரிநர் கம்பலை . . . .[110]
புள்ளிமிழ்ந் தொலிக்கும் இசையே என்றும்
சலம் புகன்று கறவுக் கலித்த
புலவு நீர் வியன் பெளவத்து
நிலவுக் கானல் முழவுத் தாழைக்
குளிர்ப் பொதும்பர் நளித் தூவல் . . . .[115]
நிரைதிமில் வேட்டுவர் கரைசேர் கம்பலை
இருங்கழிச் செறுவின் வெள்ளுப்புப் பகர்நரொடு
ஒலி யோவாக் கலி யாணர்
முது வெள்ளிலை மீக் கூறும் . . . .[106 - 119]
இரு வானம் பெயலொ ளிப்பினும்
வரும் வைகல் மீன் பிறழினும்
வெள்ளமா றாது விளையுள் பெருக
நெல்லி னோதை அரிநர் கம்பலை . . . .[110]
புள்ளிமிழ்ந் தொலிக்கும் இசையே என்றும்
சலம் புகன்று கறவுக் கலித்த
புலவு நீர் வியன் பெளவத்து
நிலவுக் கானல் முழவுத் தாழைக்
குளிர்ப் பொதும்பர் நளித் தூவல் . . . .[115]
நிரைதிமில் வேட்டுவர் கரைசேர் கம்பலை
இருங்கழிச் செறுவின் வெள்ளுப்புப் பகர்நரொடு
ஒலி யோவாக் கலி யாணர்
முது வெள்ளிலை மீக் கூறும் . . . .[106 - 119]
ஓசை ஒழுங்குடன் மூலப்படல்
கல்காயுங் கடுவேனிலொ
டிருவானம் பெயலொளிப்பினும்
வரும்வைகன் மீன்பிறழினும்
வெள்ளமா றாது விளையுள் பெருக
நெல்லி னோதை யரிநர் கம்பலை . . . .[110]
புள்ளிமிழ்ந் தொலிக்கு மிசையே யென்றுஞ்
சலம்புகன்று சுறவுக்கலித்த
புலவுநீர் வியன்பௌவத்து
நிலவுகானன் முழவுத்தாழைக்
குளிர்ப்பொதும்பர் நளித்தூவ . . . .[115]
னிரைதிமில் வேட்டுவர் கரைசேர் கம்பலை
யிருங்கழிச் செறுவின் வெள்ளுப்புப் பகர்நரொ
டொலியோவாக் கலியாணர்
முதுவெள்ளிலை மீக்கூறும்
டிருவானம் பெயலொளிப்பினும்
வரும்வைகன் மீன்பிறழினும்
வெள்ளமா றாது விளையுள் பெருக
நெல்லி னோதை யரிநர் கம்பலை . . . .[110]
புள்ளிமிழ்ந் தொலிக்கு மிசையே யென்றுஞ்
சலம்புகன்று சுறவுக்கலித்த
புலவுநீர் வியன்பௌவத்து
நிலவுகானன் முழவுத்தாழைக்
குளிர்ப்பொதும்பர் நளித்தூவ . . . .[115]
னிரைதிமில் வேட்டுவர் கரைசேர் கம்பலை
யிருங்கழிச் செறுவின் வெள்ளுப்புப் பகர்நரொ
டொலியோவாக் கலியாணர்
முதுவெள்ளிலை மீக்கூறும்
பொருளுரை:
மலையே காய்ந்து போகும்படி கடுமையான கோடை வந்தாலும், கரு மேகங்கள் மழை பொழியாவிட்டாலும், நாள்தோறும் காலையில் தோன்றும் கதிரவன் வடபாலோ தென்பாலோ பாகைஇடம் சாய்ந்து எழுந்தாலும், வைகை யாற்றில் வெள்ளம் வருவது மாறாததால் விளைச்சல் பெருகி நெல் அறுப்போர் பாடும் பாடலோசை, நீர்ப்பறவைகளின் பாடல் ஓசை. திமில்படகு வேட்டுவர் ஓசை. பெருங்கடலில் சுறா மிகுந்துள்ள இடங்களுக்கு விரும்பிச் சென்று கட்டு மரங்களில் மீனைப் பிடித்துக் கொண்டுவந்து நிலாமணல் கரையில் தாழை மரத்தடிக்கு எற்றும்போது முழவை முழக்கிக்கொண்டு பாடும் பாடல் ஓசை . உப்பு விற்போர் கூவும் ஓசை ஆகிய ஓசைகளோடு சேர்ந்து, முதுவெள்ளில் என்னும் பாண்டிய நாட்டுத் துறைமுகப் பகுதியில் அரசனை வாழ்த்தும் ஒலியும் கேட்டுக்கொண்டேயிருக்கும். முதுவெற்றிலை = தூத்துக்குடி.
பாடல் வரிகள்: