மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
மதுரைக்காஞ்சி

வீரர்கள் மன்னனை வாழ்த்துதல்
பாடல் வரிகள்:- 725 - 727
வருபுனற் கற்சிறை கடுப்ப விடையறுத்து . . . .[725]
ஒன்னா ரோட்டிய செருப்புகல் மறவர்
வாள்வளம் புணர்ந்தநின் தாள்வலம் வாழ்த்த . . . .[725 - 727]
ஒன்னா ரோட்டிய செருப்புகல் மறவர்
வாள்வளம் புணர்ந்தநின் தாள்வலம் வாழ்த்த . . . .[725 - 727]
ஓசை ஒழுங்குடன் மூலப்படல்
வருபுனற் கற்சிறை கடுப்ப விடையறுத் . . . .[725]
தொன்னா ரோட்டிய செருப்புகன் மறவர்
வாள்வலம் புணர்ந்தநின் றாள்வலம் வாழ்த்த
தொன்னா ரோட்டிய செருப்புகன் மறவர்
வாள்வலம் புணர்ந்தநின் றாள்வலம் வாழ்த்த
பொருளுரை:
மறவர் என்போர் படைவீரர். செழியனின் படைவீரர்களுக்குப் போர் என்றால் கொள்ளை ஆசை. பகைவர் தாக்கும்போது அவர்கள் ஆற்றில் வரும் வெள்ளத்தைக் கல்லடுக்கிக் கட்டப்பட்ட கலிங்கு அணை தடுத்து நிறுத்துவது போலத் தடுத்துத் திரும்பி ஓடும்படி செய்தவர்கள். ‘வாள்வலம்’ என்பது வாளால் போர்புரியும் திறமை. ‘தாள்வலம்’ என்பது ஊக்கத்துடன் செயலாற்றும் திறமை. இரண்டும் கொண்ட இத்தகைய மறவர் செழியனின் வாள்வலத்தையும் தாள்வலத்தையும் வாழ்த்தினர்.
பாடல் வரிகள்: