மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
மதுரைக்காஞ்சி

இரவின் முதற் சாம நிகழ்ச்சிகள் முடிவு பெறுதல்
பாடல் வரிகள்:- 616 - 620
உரையும் பாட்டும் ஆட்டும் விரைஇ
வேறுவேறு கம்பலை வெறிகொள்பு மயங்கிப்
வேறுவேறு கம்பலை வெறிகொள்பு மயங்கிப்
ஓசை ஒழுங்குடன் மூலப்படல்
முரையும் பாட்டு மாட்டும் விரைஇ
வேறுவேறு கம்பலை வெறிகொள்பு மயங்கிப்
வேறுவேறு கம்பலை வெறிகொள்பு மயங்கிப்
பொருளுரை:
சாலினி ஆட்டம் குரவை எனப்படும். வேலன் ஆட்டம் தழூஉ எனப்படும். இந்த இருபாலார் ஆட்டத்தையும் வெறி என்பர். வெறியாட்டத்தின்போது இடையிடையே பேசுவார்கள், பாடுவார்கள், ஆடுவார்கள். எனவே இதனை வெறிக்கூத்து என்றும் வழங்குவர்.
பேரிசை நன்னன் பெரும்பெயர் நன்னாட்
சேரி விழவின் ஆர்ப்பெழுந் தாங்கு
முந்தை யாமம் சென்ற பின்றைப் . . . .[620]
சேரி விழவின் ஆர்ப்பெழுந் தாங்கு
முந்தை யாமம் சென்ற பின்றைப் . . . .[620]
ஓசை ஒழுங்குடன் மூலப்படல்
பேரிசை நன்னன் பெறும்பெயர் நன்னாட்
சேரி விழவி னார்ப்பெழுந் தாங்கு
முந்தை யாமஞ் சென்ற பின்றைப் . . . .[620]
சேரி விழவி னார்ப்பெழுந் தாங்கு
முந்தை யாமஞ் சென்ற பின்றைப் . . . .[620]
பொருளுரை:
தன் வள்ளண்மையால் பெரும்புகழ் பெற்றவன் நன்னன். நன்னன் = திருமால் எனலுமாம். அவன் அரியணை ஏறி அரசனாகிய நாள் அவனுக்குப் ‘பெரும் பெயர் நன்னாள்’ ஆண்டுதோறும் அந்த நாள் கொண்டாடப்படும்போது மக்கள் ஆர்ப்பரித்து முழங்குவர். அது போல மதுரையில் முதல்யாமம் ஆர்ப்பரிப்போடு கழிந்தது.
பாடல் வரிகள்: