மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

மதுரைக்காஞ்சி


அகழியும் மதிலும் பெற்று, மாடங்கள் ஓங்கி நிற்றல்

பாடல் வரிகள்:- 343 - 359

நிலனும் வளனுங் கண்டமை கல்லா
விளங்குபெருந் திருவின் மான விறல்வேள்
அழும்பில் அன்ன நாடிழந் தனருங் . . . .[345]

கொழும்பல் புதிய குடியிழந் தனரும்
தொன்றுகறுத் துறையுந் துப்புத்தர வந்த
அண்ணல் யானை அடுபோர் வேந்தர்
இன்னிசை முரச மிடைப்புலத் தொழியப்
பன்மா றோட்டிப் பெயர்புறம் பெற்று . . . .[350]

மண்ணுற ஆழ்ந்த மணிநீர்க் கிடங்கின்
விண்ணுற வோங்கிய பல்படைப் புரிசைத்
தொல்வலி நிலைஇய அணங்குடை நெடுநிலை
நெய்படக் கரிந்த திண்போர்க் கதவின்
மழையாடு மலையி னிவந்த மாடமொடு . . . .[355]

வையை யன்ன வழக்குடை வாயில்
வகைபெற எழுந்து வான மூழ்கி
சில்காற் றிசைக்கும் பல்புழை நல்லில்
யாறுகிடந் தன்ன அகனெடுந் தெருவிற்

பொருளுரை:

அழும்பில் வேள் - அழும்பில் (வேள்) என்பவனுக்குப் பாண்டிய நாட்டின் வளத்தைக் கண்டு சும்மா இருக்க முடியவில்லை. அவன் முன்பே பெருஞ்செல்வம் படைத்தவன். என்றாலும் பாண்டிய நாட்டை அடையப் பாண்டியனைத் தாக்கினான். போரில் அழும்பில் (வேள்) தன் நாட்டை இழந்தான். பாண்டியன் அழும்பில் வேளின் மான உணர்வை மதித்துத் தன் மதுரையில் தங்க இனம் தந்தான். அவனும் மதுரையில் வாழ்ந்துவந்தான். தன் குடும்பத்தை இழந்த பற்பல ஊரைச் சேர்ந்தவர்களும் மதுரையில் வாழ்ந்தனர். பண்டைக் காலம் தொட்டுப் பாண்டியனோடு பகைமைச் சினம் கொண்டு வாழ்ந்தவரும் தலைமையான யானைப்படை கொண்டவரும் ஆகிய வேந்தர் தம் முரசைப் போர்க்களத்தில் போட்டுவிட்டுப் பெயர்ந்தோடும்படி பாண்டியன் போரிட்டான். அவர்களின் முரசைக் கொண்டுவந்து பாண்டியன் தன் அகழி நீரில் குளிப்பாட்டித் தனதாக்கிக் கொண்டான். ஆழத்தால் நீல நிறம் தோன்றும் அகழியும், வானளாவ ஓங்கியதும், பல படைக்கருவிகளைத் தன்னகத்தே கொண்டதுமான மதிலும், வலிமைத் திறம் காட்டும் அணங்கு உருவம் பொறிக்கப்பட்ட நிலைகளும், எண்ணெய் பூசப்பட்டுப் பளபளக்கும் கதவுகளும் கொண்டு மலைபோல் ஓங்கி மழைமேகங்கள் ஆடும் மாட மாளிகைகளில் அவர்கள் வாழ்ந்துவந்தனர். மாடங்களுக்கு வையை ஆறு போல் முற்றம். வானத்தில் மூழ்கிக் கிடந்த அந்த மாடிகளில் புழை என்னும் சன்னல். அதில் சில்லென்று காற்று நுழையும்போது புல்லாங்குழல் போன்ற இசை. ஆறு போல் அகன்ற தெருக்களில் அந்த மாளிகைகள்.