மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
மதுரைக்காஞ்சி

பாலை நில இயல்பு
பாடல் வரிகள்:- 302 - 314
நிழத்த யானை மேய்புலம் படரக்
கலித்த இயவர் இயந்தொட் டன்ன
கண்விடு புடையூஉத் தட்டை கவினழிந்து . . . .[305]
அருவி யான்ற அணியில் மாமலை
வைகண் டன்ன புன்முளி யங்காட்டுக்
கமழ்சூழ் கோடை விடரக முகந்து
காலுறு கடலின் ஒலிக்குஞ் சும்மை
இலைவேய் குரம்பை உழையதட் பள்ள . . . .[310]
உவலைக் கண்ணி வன்சொல் இளைஞர்
சிலையுடைக் கையர் கவலை காப்ப
நிழலுரு விழந்த வேனிற்குன் றத்துப்
பாலை சான்ற சுரஞ்சேர்ந் தொருசார் . . . .[302 - 314]
நிழத்த யானை மேய்புலம் படரக்
கலித்த வியவ ரியந்தொட் டன்ன
கண்விடு புடையூஇத் தட்டை கவினழிந் . . . .[305]
தருவியான்ற வணியின் மாமலை
வைகண் டன்ன புன்முளி யங்காட்டுக்
கமஞ்சூழ் கோடை விடரக முகந்து
காலுறு கடலி னொலிக்குஞ் சும்மை
யிலைவேய் குரம்பை யுழையதட் பள்ளி . . . .[310]
யுவலைக் கண்ணி வன்சொ லிளைஞர்
சிலையுடைக் கையர் கவலை காப்ப
நிழலுரு விழந்த வேனிற் குன்றத்துப்
பாலை சான்ற சுரஞ்சேர்ந் தொருசார்
பொருளுரை:
யானை பச்சை மூங்கிலை உண்டு வாழ்ந்துவந்தது. அந்தப் பெரிய பச்சை மூங்கில் தூறு தீப்பற்றி எரிந்துவிட்டது. அதனால் யானை மேய்ச்சலுக்காக வேறு நிலத்தைத் தேடிச் சென்று விட்டது. இசைவாணர்கள் இசைக்கருவிகளை முழக்குவது போல கானவர் மூங்கிலைப் பிளந்து செய்த தம் தட்டை என்னும் கருவியை தழைத்திருக்கும் தம் பயிரை மேய வரும் யானைகளை விரட்ட முழக்குவர். யானைக்கூட்டம் வேற்றுப் புலம் சென்றுவிட்டதால் தட்டை முழக்கப்படாமல் தன் அழகமைதி அழிந்து வெறுமனே கிடந்தது. அருவி ஒழுகும் அழகிய பெரிய மலை. அதன் சாரலில் வைக்கோலைப் போலப் புல் உலர்ந்து கிடக்கும் அழகிய காடு. அதில் கோடை மேகம் இடி இடித்து உண்டாக்கிய வெடிப்பு. அந்த நிலவெடிப்பில் காற்று நுழையும்போது, காற்று மோதி கடலலை ஒலிப்பது போல ஓசை. இந்த ஓசை கேட்கும் இடத்தில் இலைகளால் வேயப்பட்ட குடிசை. அதன் பக்கத்தில் (பொடி சுடாமல் இருக்கத்) தோலை விரித்து அதன்மேல் நின்றுகொண்டு இளைஞர் வில்லேந்திய கையராய்க் குடிசையைக் காத்துக்கொண்டு நின்றனர். மரங்களில் இலை இல்லை. எனவே நிழல்கூடத் தன் உருவத்தை இழந்து காணப்பட்ட பாலைநிலம் அது. (ஒப்பு நோக்குக - ‘முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து பாலை எனபதோர் படிமம் கொள்ளும் காலை’ - சிலப்பதிகாரம்) இந்தப் பாலை நிலப் பகுதி ஒருபக்கம்.