மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
மதுரைக்காஞ்சி

மருத நிலத்தில் எழும் பற்பல ஓசைகள்
பாடல் வரிகள்:- 259 - 270
கள்ளார் களமர் பெயர்க்கும் ஆர்ப்ப . . . .[260]
ஒலிந்த பகன்றை விளைந்த கழனி
வன்கை வினைஞர் அரிபறை யின்குரல்
தளிமழை பொழியுந் தண்பரங் குன்றிற்
கவிகொள் சும்மை யொலிகொ ளாயந்
ததைந்த கோதை தாரொடு பொலியப் . . . .[265]
புணர்ந்துட னாடும் இசையே யனைத்தும்
அகலிரு வானத் திமிழ்ந்தினி திசைப்பக்
குருகு நரல மனை மரத்தான்
மீன் சீவும் பாண் சேரியொடு
மருதஞ் சான்ற தண்பணை சுற்றிஒருசார்ச . . . .[259 - 270]
கள்ளார் களமர் பெயர்க்கு மார்ப்பே . . . .[260]
யொலிந்த பகன்றை விளைந்த கழனி
வன்கை வினைஞ ரரிபறை யின்குரற்
றளிமழை பொழியுந் தண்பரங் குன்றிற்
கலிகொள் சும்மை யொலிகொ ளாயந்
ததைந்த கோதை தாரொடு பொலியப் . . . .[265]
புணர்ந்துட னாடு மிசையே யனைத்து
மகலிரு வானத் திமிழ்ந்தினி திசைப்பக்
குருகுநரல மனைமரத்தான்
மீன்சீ்வும் பாண்சேரியொடு
மருதஞ் சான்ற தண்பணை சுற்றி, யொருசார்ச் . . . .[270]
பொருளுரை:
தாமரைப் பூக்களில் காடைக்குருவி தன் சேவலோடு உறங்கியது. அங்குப் படர்ந்திருந்த வள்ளைக் கொடிகளை ஒதுக்கிவிட்டு வலை போட்டதில் கிட்டிய பெரிய பெரிய மீன்களை வலைமீனவர் விலை சொல்லிக் கூவினர். நூழில் என்பது கரும்பாலை. வயலில் விளைந்த கரும்பை நூழில் எந்திரம் நெரிக்கும் ஓசை முழக்கம் கேட்டது. கரும்பின் வெல்லக் கட்டியை ஏற்றிச் செல்லும்போது சேற்றில் மாட்டிக் கொண்ட வண்டிச் சக்கரத்தைத் தூக்கி விட்டுக் கொண்டு உழவர் காளைகளை அதட்டி ஓட்டும் ஓசை கேட்டது. மாலைக்குப் பயன்படும் பகன்றை வயல்வெளியில் தழைத்திருந்தது. தொழிலாளர் அதனை அரிக்கும்போது முழக்கும் பறையின் ஒலி கேட்டது. திருப்பரங்குன்றத்தில் மழை பொழியும் ஓசை கேட்டது. மழை பொழியும் மகிழ்ச்சியால் மக்கள் செய்த ஆரவார ஒலி கேட்டது. பகன்றை மாலை சூடிக்கொண்டு மக்கள் கை கோத்து ஆடும் குரவை, தோள் தழுவி ஆடும் துணங்கை ஆகியவற்றின் பாட்டோசை கேட்டது. இந்த ஓசைகள் வானளாவ முழங்கியதால் எங்கும் இனிய ஓசையே எதிரொலித்தது. மீன் தேடும் குருகுகள் நீர்ப் பரப்புகளுக்குச் செல்லாமல் மீன் சீவும் வீட்டு முற்றத்திலிருந்த மரத்தில் அமர்ந்து இரை தேடலாயின.