மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
மதுரைக்காஞ்சி

அகத்தியரின் வழிவந்த சான்றோன்
பாடல் வரிகள்:- 024 - 042
நிணம் வாய்ப்பெய்த பேய் மகளிர் இணை . . . .[25]
யொலியிமிழ் துணங்கைச் சீர்ப்
பிணை யூபம் எழுந் தாட
அஞ்சு வந்த போர்க்களத் தான்
ஆண் டலை அணங் கடுப்பின்
வய வேந்தர் ஒண் குருதி . . . .[30]
சினத் தீயிற் பெயர்பு பொங்கத்
தெற லருங் கடுந் துப்பின்
விறல் விளங்கிய விழுச் சூர்ப்பின்
தொடித் தோட்கை துடுப் பாக
ஆ டுற்ற ஊன் சோறு . . . .[35]
நெறி யறிந்த கடிவா லுவன்
அடி யொதுங்கிப் பிற் பெயராப்
படை யோர்க்கு முரு கயர
அமர் கடக்கும் வியன் றானைத்
தென்னவற் பெயரிய துன்னருந் துப்பின . . . .[40]
தொல்முது கடவுட் பின்னர் மேய
வரைத்தாழ் அருவிப் பொருப்பிற் பொருந . . . .[24 - 42]
னிணம்வாய்ப்பெய்த பேய்மகளி . . . .[25]
ரிணையொலியிமிழ் துணங்கைச்சீர்ப்
பிணையூப மெழுந்தாட
வஞ்சுவந்த போர்க்களத்தா
னாண்டலை யணங்கடுப்பின்
வயவேந்த ரொண்குருதி . . . .[30]
சினத்தீயிற் பெயர்புபொங்கத்
தெறலருங் கடுந்துப்பின்
விறல்விளங்கிய விழுச்சூர்ப்பிற்
றொடித்தோட்கை துடுப்பாக
வாடுற்ற வூன்சோறு . . . .[35]
நெறியறிந்த கடிவாலுவ
னடியொதுங்கிப் பிற்பெயராப்
படையோர்க்கு முருகயர
வமர்கடக்கும் வியன்றானைத்
தென்னவற் பெயரிய துன்னருந் துப்பிற் . . . .[40]
றொன்முது கடவுட் பின்னர் மேய
வரைத்தா ழருவிப் பொருப்பிற் பொருந
பொருளுரை:
(பாண்டியன் நெடுஞ்செழியன் குற்றால மலைப் போரில் வென்று அதனைத் தனதாக்கிக் கொண்டான். அங்கு நடைபெற்ற போர் இப்பகுதியில் பேசப்படுகிறது) வரைதாழ் அருவி என்பது குற்றாலம். அங்கு இக்காலத்தில் உள்ள இரத்தின சபையில் தென்திசை நோக்கிக் கூத்தாடுபவர் தென்திசைக் கடவுள் (தட்சிணாமூர்த்தி). தென்திசைக் கடவுளைத் ‘தென்னவன்’ என்றனர். தென்னவனைத் ‘தொன்முது கடவுள்’ எனவும் வழங்கினர். (குற்றாலம் பொதியமலையின் ஒரு பகுதி. இப்பகுதியை வள்ளல் ஆய் ஆண்டு வந்தான் என்பதைச் சங்கப் பாடல்கள் தெரிவிக்கின்றன) பிற்காலத்துப் பரணி நூல்கள் போர்க்களக் காட்சியைப் பாடும்போது பிணத்தைப் பேய்க்கூட்டம் சோறாக்கித் தின்றதாகப் பாடுகின்றன. அவற்றிற்கு முன்னோடி போல அமைந்துள்ளது இந்தப் பாடல் பகுதி. பிணமாகிய களிறுகளைக் குவித்துப் கொழுப்பை எடுத்துப் பேய்க்கூட்டம் வாயில் அதவியது. பின்னர் தோளில் கை கோத்துக்கொண்டு ஒன்றன்மேல் ஒன்று விழுந்து தூண் போல் நின்று போர்க்களத்தில் துணங்கைக் கூத்து ஆடியது. ஆண்களின் தலைகளைக் கல்லாக வைத்து அடுப்புக் கூட்டியது. அரசர்களின் குருதியை உலைநீராக ஊற்றியது. அரசர்களின் சினத்தைத் தீயாக மூட்டியது. வலிமை மிக்க அவர்களின் கைகளை முறித்துத் துடுப்பாக்கிக்கொண்டு சோற்றைத் துளாவியது. பிணக் கறி போட்டுச் சோறு சமைத்தது.. சமையல் தொழிலில் வல்ல வாலுவன் விலகிச் சென்றுவிட்டான். இது படையினரை ஆட்டுவிக்கும் ‘முருகு’ ஆட்ட விழா. இப்படிப் போரிட்டு, தென்னவன் பெயர் கொண்ட கடவுளின் அருவி பாயும் நாட்டை இந்தச் செழியன் தனதாக்கிக்கொண்டான்.