குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு


தலைவன் வரும் வழியின் அருமை நினைந்து - தலைவி கலங்குதல்!

பாடல் வரிகள்:- 237 - 251

.............................. அதற்கொண்டு,
அன்றை அன்ன விருப்பொடு, என்றும்
இரவரல் மாலையனே, வருதோறும் . . . .[237 - 251]

பொருளுரை:

அன்று முதல் இரவில் வருதல் அவனுக்கு வழக்கமாயிற்று - பின்னர், நாள்தோறும் இரவில் வந்து கெஞ்சினான் அன்று என்னை அடைந்த அதே ஆவலோடு ஒவ்வொரு நாளும் என்னிடம் வந்து என்னைத் தனக்குத் தரும்படி கெஞ்சினான். மாலைபோல் தொடர்ந்து நெருங்கிக் கேட்டான்.

காவலர் கடுகினும், கத நாய் குரைப்பினும், . . . .[240]

நீ துயில் எழினும், நிலவு வெளிப்படினும்,
வேய் புரை மென் தோள் இன்துயில்
பெறாஅன், பெயரினும், முனியல் உறாஅன், . . . .[240 - 243]

பொருளுரை:

தடைகள் நேர்ந்து இவள் இன்பம் கிடைக்காவிட்டால் சலிப்பில் சினம் கோள்ளமாட்டான் - ஊர்க்காவலர் விரைந்து வரினும், புதியவனாகிய இவனைக் கண்டு சினந்து நாய் குரைப்பினும், அன்னையாகிய நீ துயில் எழுந்துவிடாலும், நடமாடுபவர் தெளிவாகத் தெரியும்படி நிலாவெளிச்சம் காய்ந்தாலும் அவன் இவளை அடைவதற்குத் தடையாக இருக்கும். இவளோடு இன்பத் துயில் கொள்ளும் வாய்ப்பு கிட்டாமல் போகும். அப்போதெல்லாம் அதற்காக அவன் சினம் கொள்ளமாட்டான்.

இளமையின் இகந்தன்றும் இலனே, வளமையின்
தன் நிலை தீர்ந்தன்றும் இலனே கொன் ஊர் . . . .[245]

மாய வரவின் இயல்பு நினைஇத் தேற்றி,
நீர் எறி மலரின் சாஅய், இதழ் சோரா,
ஈரிய கலுழுமிவள் பெரு மதர் மழைக் கண்
ஆகத்து அரிப் பனி உறைப்ப, நாளும்
வலைப் படு மஞ்ஞையின் நலம் செலச் சாஅய், . . . .[250]

நினைத்தொறும் கலுழுமால் இவளே கங்குல் . . . .[244 - 251]

பொருளுரை:

அவன் அழவில்லை இவள் அழுகிறாள் - அவன் இளமை மாறாதவன், வளமை குறையாதவன், தன் தகைமையிலிருந்து நழுவாதவன், சும்மாக் கிடக்கும் ஊரில் இப்படி மாய நிகழ்வுகள் நடக்கத்தான் செய்யும் என்பதனை நன்கு உணர்ந்தவன். இந்நிகழ்வுகளை வெறுக்காமல் இவளைப் போற்றுவான். மலரை அடிக்கும் மழைநீர் போன்றவை அவை என்று எண்ணிக்கொள்வான். அவன் அப்படி, இவள் எப்படி? இவளது கண்ணில் ஈரம், பெருகிய மதமதப்பு. அது மழையாக மாறியது. அவள் மார்பகத்தில் அரிக்கும் பனியாகிப் பொழிந்தது. வலையில் பட்ட மயில்போல் மேனியழகு குன்றி வதங்குகிறாள். நினைக்கும் போதெல்லாம் திரும்மத் திரும்ப அழுகிறாள்.