குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு


யானை மீது அம்பைச் செலுத்தினான் தலைவன்

பாடல் வரிகள்:- 169 - 183

................................ வார் கோல்
உடு உறும் பகழி வாங்கிக் கடு விசை . . . .[170]

அண்ணல் யானை அணி முகத்து அழுத்தலின்,
புண் உமிழ் குருதி முகம் பாய்ந்து இழி தரப்
புள்ளி வரி நுதல் சிதைய, நில்லாது
அயர்ந்து புறங்கொடுத்த பின்னர், நெடுவேள்
அணங்கு உறு மகளிர் ஆடு களம் கடுப்பத் . . . .[169 - 175]

பொருளுரை:

அவன் யானை முகத்தில் அம்பு எய்தான் - நீண்ட கோலில் விண்மீன்போல் முனையுள்ள அம்பைக் கடுவிசையோடு அவன் எய்தான். களிற்றின் அழகிய முகத்தில் அது பாய்ந்தது. அப்புண்ணிலிருந்து குருதி பாய்ந்து ஒழுகியது. அதன் நெற்றியிலிருந்த புள்ளிகளும், வரிக்கோடுகளும் சிதைந்தன. அயர்ந்து போன அந்த ஆண்யானை அங்கே நிற்காமல் திரும்பி ஓடிவிட்டது. உடனே நாங்கள் முருகனுக்கு வெறியாடும் களத்தில் மகளிர் கைகோத்துக் கொண்டு ஆடுவதுபோல் கைகோத்துக் கொண்டோம்.

திணி நிலைக் கடம்பின் திரள் அரை வளைஇய
துணையறை மாலையின், கை பிணி விடேஎம்,
நுரையுடைக் கலுழி பாய்தலின் உரவுத் திரை
அடுங் கரை வாழையின் நடுங்கப் பெருந்தகை,
“அஞ்சில் ஓதி! அசையல்! யாவதும் . . . .[180]

அஞ்சல், ஓம்பு நின் அணி நலம் நுகர்கு” என
மாசு அறு சுடர் நுதல் நீவி, நீடு நினைந்து,
என் முகம் நோக்கி நக்கனன்.......... . . . .[176 - 183]

பொருளுரை:

கை கோத்துக்கொண்டிருந்த நாங்கள் நுரைத்துக்கொண்டு வரும் வெள்ளத்தில் பாய்ந்தோம் - முருகனுக்கு வெறியாடுவோர் கடப்பம்பூ மாலையை அணிந்திருப்பர். அந்த மாலை நெருக்கமாகப் பிணிக்கப் பட்டிருப்பது போல் நாங்கள் எங்களுடைய கைகளை ஒருவருக்கொருவர் இறுக்கிப் பிடித்துக்கொண்டு நுரைத்துக்கொண்டு வரும் வெள்ளத்தில் பாய்ந்தோம். வெள்ளம் அரிக்கும்போது கரையோர வாழைமரம் ஆடுவது போல அப்போது தலைவி நடுங்கினாள்.

அவன் அவளை வெள்ளத்திலிருந்து தூக்கிக்கொண்டு கரைக்கு வந்தான். அவன் பெருந்தகையாளன். அழகே! அசையாதே. எதற்கும் அஞ்சாதே. உன் அழகை நான் சுவைக்க வேண்டும் – என்றான். வந்தான். அவளது நெற்றியைத் தடவிக்கொடுத்தான். ஏதோ நெடுநேரம் எண்ணிப்பார்த்தான். என்னைப் பார்த்தான். ஒரு சிரிப்பு சிரித்துவிட்டன். அவளை அவன் நுகர நான் விலகிக்கொள்ளவேண்டும் என்பது அந்தச் சிரிப்பின் பொருள்.