குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு


காவலன் எய்திய அம்பினால் சினமடைந்த யானை

பாடல் வரிகள்:- 153 - 169

இருவி வேய்ந்த குறுங்கால் குரம்பைப்
பிணை ஏர் நோக்கின் மனையோள் மடுப்ப,
தேம்பிழி தேறல் மாந்தி மகிழ் சிறந்து, . . . .[155]

சேமம் மடிந்த பொழுதின், வாய்மடுத்து
இரும் புனம் நிழத்தலின், சிறுமை நோனாது,
அரவு உறழ் அம் சிலை கொளீஇ, நோய்மிக்கு
உரவுச்சின முன்பால் உடல் சினம் செருக்கிக்
கணை விடு புடையூக் கானம் கல்லென . . . .[160]

மடி விடு வீளையர் வெடிபடுத்து எதிரக்
கார்ப் பெயல் உருமிற் பிளிறிச் சீர்த் தக
இரும்பிணர்த் தடக்கை இரு நிலம் சேர்த்திச்
சினம் திகழ் கடாஅம் செருக்கி மரம் கொல்பு
மையல் வேழம் மடங்கலின் எதிர்தர, . . . .[165]

உய்வு இடம் அறியேம் ஆகி, ஒய்யென
திருந்து கோல் எல் வளை தெழிப்ப, நாணு மறந்து,
விதுப்புறு மனத்தேம் விரைந்து அவற் பொருந்திச்
சூர் உறு மஞ்ஞையின் நடுங்க,............ . . . .[153 - 169]

பொருளுரை:

அப்போது, மதம் கொண்ட ஆண்யானை ஒன்று சிங்கம் போல அங்கு வந்தது. கதிர் அறுத்தபின் உள்ள தினைத்தட்டைப் புல்லை அறுத்து வேயப்பட்ட குடிசை. அதன் தலைவி மனையோள். மானைப்போல் மருண்டு பார்த்துக் கொண்டே தன் கணவனுக்குத் தேனில் பிழிந்தெடுத்த தேறல் கள்ளை ஊரெல்லாம் உறங்கும் நேரத்தில் ஊட்டிவிட்டாள். உண்ட அவன் யானைக் காவலுக்குச் சென்றான்.

பாம்பு போல் வளைந்த வில்லுடன் சென்றான். யானை விளைச்சலைப் பாழாக்குவது அவன் நெஞ்சை நோகச் செய்தது. அதனால் உரத்திலும், உடலிலும் தோன்றிய சினச் செருக்குடன் அம்பெய்யப் புடைத்துக் கொண்டும், வீளையொலி எழுப்பிக் கொண்டும், வெடி போட்டு முழக்கம் செய்து கொண்டும் காடெல்லாம் கலங்கும்படி சென்றான்.

மழை பெய்ய உருமும் இடிபோல் வெடி முழக்கம் கேட்ட யானை பிளிறிற்று. மதம் பிடித்தது போல் தன் கையை நிலத்தில் போட்டு மரங்களை அடியோடு சாய்த்தது. இரவு வேளையில் வெடி சத்தம் கேட்டு மருண்டு போயிருந்த யானை அப்போது பகல் வேளையில் மடங்கல் சிங்கத்தைக் கண்டு மேலும் மருண்டுபோய் அதனை எதிர்த்துத் தாக்கும் நிலையினதாய் அவளும் அவனும் இருக்கும் இடத்துக்கு ஓடி வந்தது. தினைப்புனம் காக்கும் பணியில் இளைஞர்களும், இளம்பெண்களும் ஈடுபடுவது வழக்கம். மகளிர் தினைக்கதிர்களைக் கவரவரும் பறவைகளை ஓட்டுவர். காளையர் அதனைக் கவரவரும் விலங்குகளை ஓட்டுவர். இப்பகுதியில் விலங்குகளை ஓட்ட வேட்டையாடிக்கொண்டு வரும் காளையர் பேசப்படுகின்றனர்.

முருகள்-வள்ளி கதை - முளைத்த வரலாறு. யானையைக் கண்டதும் பயந்து ஓடினோம். தப்பிக்கும் இடம் தெரியவில்லை. வளையல் குலுங்கி ஒலிக்கும்படி ‘ஒய்’ என்று கூவிக்கொண்டு ஓடினோம். நாணம் மறந்துபோய் விட்டது. நெஞ்சம் படபடத்தது. அவனை அணைத்துக்கொண்டு தலைவி நடுங்கினாள். மழைமேகத்தைக் கண்டால் மயில் ஆடுமல்லவா. அப்படி மழைமேகப்பேய் பிடித்த மயில்போல் நடுங்கினாள்.