குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு


தலைவனின் எழில்

பாடல் வரிகள்:- 107 - 127

எண்ணெய் நீவிய சுரி வளர் நறும் காழ்த்
தண் நறும் தகரம் கமழ மண்ணி,
ஈரம் புலர விரல் உளர்ப்பு அவிழா,
காழ் அகில் அம் புகை கொளீஇ, யாழிசை . . . .[110]

அணி மிகு வரி மிஞிறு ஆர்ப்பத் தேங்கலந்து
மணி நிறம் கொண்ட மா இருங் குஞ்சியின்,
மலையவும், நிலத்தவும், சினையவும், சுனையவும்,
வண்ண வண்ணத்த மலர் ஆய்பு விரைஇய
தண் நறும் தொடையல், வெண் போழ்க் கண்ணி, . . . .[115]

நலம் பெறு சென்னி நாம் உற மிலைச்சி,
பைங்கால் பித்திகத்து ஆய் இதழ் அலரி
அம் தொடை ஒரு காழ் வளைஇச் செந்தீ
ஒண் பூம் பிண்டி ஒரு காது செரீஇ,
அம் தளிர்க் குவவு மொய்ம்பு அலைப்பச் சாந்து அருந்தி . . . .[120]

மைந்து இறை கொண்ட மலர்ந்து ஏந்து அகலத்து,
தொன்று படு நறும் தார் பூணொடு பொலிய,
செம் பொறிக்கு ஏற்ற வீங்கு இறைத் தடக் கையின்
வண்ண வரிவில் ஏந்தி அம்பு தெரிந்து,
நுண் வினைக் கச்சைத் தயக்கு அறக் கட்டி, . . . .[125]

இயல் அணிப் பொலிந்த ஈகை வான் கழல்
துயல்வருந்தோறும் திருந்தடிக் கலாவ, . . . .[107 - 127]

பொருளுரை:

ஒருவன் வந்தவன் - அவன் தலைமயிர் சுருண்டிருந்தது. எண்ணெய் தடவிப் பளபளப்பாக இருந்தது. வயிரம் பாய்ந்த தகரக் கட்டையிலிருந்து வடித்தெடுத்த செண்டை மணம் கமழும்படி தடவியிருந்தான். மழையால் ஈரமாயிருந்த தலைமயிரை விரல்களை விட்டுப் பிரித்து உலர்த்திக் கொண்டிருந்தான்.

புகையும் அகில்கட்டையும் ஈரத்தைப் புலர்த்தின. அதன் மணத்தில் மயங்கிப் பொறிவண்டுகள் ஒலித்துக்கொண்டு அவனது குஞ்சியைச் சூழ்ந்து சுழன்று கொண்டிருந்தன. மணக்கும் மலர்க்கண்ணித் தொடையல் அவன் சென்னியை அழகுறுத்திக் கொண்டிருந்தது. தொடையலில் இருந்த பூக்கள் மலையிலும், நிலத்திலும் பூத்தவை. சினையிலும், சுனையிலும் பூத்தவை. ஆராய்ந்து பொறுக்கியெடுத்த பல்வேறு வண்ணம் கொண்டவை. அவன் மார்பில் வைரமாலையுடன் பூவிதழ்களாலான பித்திகைத் தொடையலும் தொங்கியது. ஒருபக்கம் காதோரத்தில் தலையொப்பனையாக அசோகப்பூவைச் செருகியிருந்தான்.

மலைக்குவடுபோல் நிமிர்ந்திருந்த அவன் நெஞ்சு தளிர் போன்று தளதளப்பாகவும் இருந்தது. மார்பில் சந்தனம் பூசியிருந்தான். மார்பின் அகலம் வலிமையும் விம்மித ஏற்றத்தன்மையும் கொண்டு மலர்ந்திருந்தது. அகலத்தில் பூண்மாலையும், பூமாலையும் பொலிந்தன. செம்மாந்து உயர்ந்த தோளோடு சேர்ந்த கைகளில் எய்யும் அம்போடு வரிந்துள்ள வில் இருந்தது. உடுத்தியிருந்த ஆடை நழுவாமல் இருக்க வேலைப்பாடுகள் கொண்ட கச்சை அணிந்திருந்தான்.