குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு


நாய்களை அடக்கிக் கெடுதி வினவிய தலைவன்

பாடல் வரிகள்:- 135 - 142

மாறு பொருது ஓட்டிய புகல்வின் வேறு புலத்து . . . .[135]

ஆ காண் விடையின், அணி பெற வந்து எம்
அலமரல் ஆயிடை வெரூஉதல் அஞ்சி,
மெல்லிய இனிய மேவரக் கிளந்து எம்
ஐம்பால் ஆய் கவின் ஏத்தி, “ஒண் தொடி
அசைமென் சாயல் அவ்வாங்கு உந்தி . . . .[140]

மட மதர் மழைக் கண் இளையீர்! இறந்த
கெடுதியும் உடையேன்” என்றனன்........... . . . .[135 - 142]

பொருளுரை:

அவன் பசுவைப் பார்த்த காளை ஆனான். அவனைப் பார்த்ததும் நாங்கள் நடுங்கினோம். எழுந்து நடக்க முடியாமல் தள்ளாடினோம். நெஞ்சு படபடத்தது. மிரண்டு பார்த்துக்கொண்டே வேறிடம் நோக்கி நகர்ந்தோம். அவன் நிலையோ மாறுபட்டிருந்தது. விரும்பத்தக்க இனிய நிலத்தில் பசுவைக்கண்ட காளைபோல அவன் நெருங்கி வந்தான். நாங்கள் திண்டாடி மருள்வதைப் பார்த்து அவன் அஞ்சினான்.

கெடுதி செய்துவிட்டேன் போலும் – என்றான் மென்மை, இனிமை, விருப்பம் மூன்றும் கலந்து அவன் பேசினான். தலைவி கூந்தலின் ஒப்பனையழகைப் பாராட்டினான். ஒளிரும் வளையலும், ஒய்யாரமாக அசையும் மேனியழகும், அழகால் வளைந்து குழிந்த உந்தியும், மடமைத் திமிரி மழைபோல் ஈரப்பார்வை தரும் கண்களும் கொண்ட இளமான்களே! – என்று அழைத்தான். வரம்பு கடந்த கெடுதி செய்துவிட்டேன் போலும் – என்றான். அவன் சொல்லுக்கு நாங்கள் மறுமொழி கூறவில்லை. எனவே அவன் அல்லாந்தான், துன்புற்றான், கலங்கினான்.