குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு


மன்றலில் மணப்பேன் என்று கூறிப் பிரிதல்

பாடல் வரிகள்:- 231 - 237

“நேர் இறை முன் கை பற்றி, நுமர் தர,
நாடு அறி நன் மணம் அயர்கம் சில் நாள்,
கலங்கல் ஓம்புமின், இலங்கு இழையீர்!” என
ஈர நல் மொழி தீரக் கூறி,
துணை புணர் ஏற்றின் எம்மொடு வந்து, . . . .[235]

துஞ்சா முழவின் மூதூர் வாயில்
உண் துறை நிறுத்துப் பெயர்ந்தனன்............... . . . .[231 - 237]

பொருளுரை:

“நுண்ணிய மூட்டுவாய் உடைய முன்கையைப் பற்றி, உன்னை உன் உறவினர் எனக்குத் தர, நாடறியும் நல்ல மணத்தினை நான் நடத்துவேன் இன்னும் சில நாட்களில்! கலங்குதலைப் பாதுகாப்பீர்களாக, விளங்குகின்ற அணிகலன்களை அணிந்தவர்களே!” என்று நல்ல சொற்களைத் தலைவியின் துன்பம் தீருமாறுக் கூறி, பசுவைப் புணர்ந்த ஏறு போல், எங்களுடன் வந்து, முழவின் ஓசை நிற்காத பழைய நம்மூரின் வாயிலில் பலரும் நீரை உண்ணும் துறையில் எங்களை நிறுத்திவிட்டுச் சென்றான்.

சொற்பொருள்:

நேர் இறை - நுண்ணிய மூட்டுவாய், முன்கை பற்றி - முன்கையைப் பற்றி, நுமர் தர - உன்னை உன் உறவினர் எனக்குத் தர, நாடறி நன்மணம் அயர்கம் - நாடறியும் நல்ல மணத்தினை நான் நடத்துவேன், சில் நாள் - சில நாட்களில், கலங்கல் ஓம்புமின் - கலங்குதலை பாதுகாப்பீர்களாக, இலங்கு இழையீர் - விளங்குகின்ற அணிகலன்களை அணிந்தவர்களே, என - என்று, நன் மொழி தீரக் கூறி - நல்ல சொற்களைத் தலைவியின் துன்பம் தீருமாறு கூறி, துணை புணர் ஏற்றின் எம்மொடு வந்து - பசுவைப் புணர்ந்த ஏறு போல் எங்களுடன் வந்து, துஞ்சா முழவின் மூதூர் வாயில் உண் துறை - முழவின் ஓசை நிற்காத பழைய நம்மூரின் வாயிலில் பலரும் நீரை உண்ணும் துறையில், நிறுத்துப் பெயர்ந்தனன் - எங்களை நிறுத்திவிட்டு சென்றான்