குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு


இல்லறம் நாடினான் இனியவன்

பாடல் வரிகள்:- 199 - 208

................ எம் விழைதரு பெரு விறல்
உள்ளத் தன்மை உள்ளினன் கொண்டு, . . . .[200]

“சாறு அயர்ந்தன்ன மிடாஅச் சொன்றி
வருநர்க்கு வரையா வள நகர் பொற்ப
மலரத் திறந்த வாயில் பலர் உண
பைந்நிணம் ஒழுகிய நெய்ம் மலி அடிசில்
வசையில் வான் திணைப் புரையோர் கடும்பொடு . . . .[205]

விருந்து உண்டு எஞ்சிய மிச்சில், பெருந்தகை,
நின்னோடு உண்டலும் புரைவது” என்று ஆங்கு
அறம் புணை ஆகத் தேற்றி,................ . . . .[199 - 208]

பொருளுரை:

தலைவியை விரும்புகின்ற பெரிய வெற்றியை உடையவன், தலைவியின் உள்ளத்தின் தன்மையை எண்ணிக் கொண்டு, “விழாக் கொண்டாடினாற்போல் பெரிய பானையில் சோறு சமைத்து, வருபவர்களுக்கு எல்லையில்லாமல் உண்ணுவதற்கு கொடுத்து, செல்வமுடைய இல்லம் பொலியுமாறு அகலத் திறந்த வாசலுடன் பலர் உண்ணுவதற்கு, பசுமையான கொழுப்பு, நெய் நிறைந்த சோறு ஆகியவற்றை, குற்றமில்லாத உயர்ந்த குடியின் சான்றோர், மற்றும் சுற்றத்தாரும் விருந்து உணவாக உண்டு மிஞ்சியதை, தகமையுடையவளே! உன்னுடன் உண்ணுதல் உயர்ந்தது”, என்று அங்கு, அறமுடைய இல்லறம் தங்களுக்குப் புணையாக இருக்கும் என்று தலைவிக்கு விளக்கி,

சொற்பொருள்:

எம் விழைதரு பெரு விறல் - எம்மை விரும்புகின்ற பெரிய வெற்றியை உடையவன், உள்ளத் தன்மை உள்ளினன் கொண்டு - தலைவியின் உள்ளத்தின் தன்மையை எண்ணிக் கொண்டு அவன், சாறு அயர்ந்து அன்ன - விழாக் கொண்டாடினாற்போல், மிடாஅச் சொன்றி - பெரிய பானையில் சோறு, வருநர்க்கு - வருபவர்களுக்கு, வரையா - எல்லையில்லாது, வள நகர் - வளமையான இல்லம், பொற்ப - பொலிய, மலரத் திறந்த வாயில் - அகலத் திறந்த வாசல், பலர் உண - பலர் உண்ணுவதற்கு, பை நிணம் - பசுமையான கொழுப்பு, ஒழுகிய - வடிகின்ற, நெய் மலி அடிசில் - நெய் நிறைந்த சோறு, வசையில் வான் திணைப் புரையோர் - குற்றமில்லாத உயர்ந்த குடியின் சான்றோர், கடும்பொடு - சுற்றத்தாருடன், விருந்து உண்டு எஞ்சிய மிச்சில் - விருந்து உணவு உண்டு மிஞ்சியது, பெருந்தகை - தகமையுடையவளே, நின்னோடு உண்டலும் - உன்னுடன் உண்ணுதல், புரைவது - உயர்ந்தது, என்று ஆங்கு - என்று அங்கு, அறம் புணையாகத் தேற்றி - அறமுடைய இல்லறம் தங்களுக்கு புணையாக இருக்கும் என்று விளக்கி