குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு

யானை மீது அம்பைச் செலுத்தினான் தலைவன்
பாடல் வரிகள்:- 169 - 183
உடு உறும் பகழி வாங்கிக் கடு விசை . . . .[170]
அண்ணல் யானை அணி முகத்து அழுத்தலின்,
புண் உமிழ் குருதி முகம் பாய்ந்து இழி தரப்
புள்ளி வரி நுதல் சிதைய, நில்லாது
அயர்ந்து புறங்கொடுத்த பின்னர், நெடுவேள்
அணங்கு உறு மகளிர் ஆடு களம் கடுப்பத் . . . .[175]
லுடுவுறும் பகழி வாங்கிக் கடுவிசை . . . .[170]
யண்ணல் யானை யணிமுகத் தழுத்தலிற்
புண்ணுமிழ் குருதி முகம்பாய்ந் திழிதரப்
புள்ளி வரிநுதல் சிதைய நில்லா
தயர்ந்துபுறங் கொடுத்த பின்னர் நெடுவே
ளணங்குறு மகளி ராடுகளங் கடுப்பத் . . . .[175]
பொருளுரை:
நீண்ட கோலையுடைய உடுச் சேர்ந்த கணையை, இழுத்து விரைவாகச் செல்லும்படி ஏவி, தலைமையுடைய யானையின் அழகிய முகத்தில் புகுத்தியதால் புண்ணாகி, அந்தப் புண்ணிலிருந்து கொட்டும் குருதி முகத்தில் பரவி கீழே வடிய, புள்ளியும் வரியும் உடைய நெற்றி அழிய, நிற்காது தன்னை மறந்து புறமுதுகிட்டு ஓடிய பின்னர், முருகன் தீண்டியதால் வருத்தமுற்ற பெண்களுக்காக ஏற்படுத்தப்பட்ட வெறியாட்டுக் களத்தைப் போன்று,
குறிப்பு:
புள்ளி வரி (173) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - புகர்களும் வரிகளும், C. ஜெகந்நாதாசார்யார் உரை - புள்ளி வரி, ஒரு பொருட்பன்மொழி.
சொற்பொருள்:
வார் கோல் - நீண்ட கோல், உடு உறும் - நாணைக் கொள்ளும் பொருட்டு கணையில் அமைந்த இடத்தில் சேர்ந்த, பகழி - அம்பு, வாங்கி - இழுத்து, கடு விசை - விரைவாக செல்லும்படி ஏவி, அண்ணல் யானை - தலைமையுடைய யானை, அணி முகத்து அழுத்தலின் - அழகிய முகத்தில் புகுத்தியதால், புண் உமிழ் குருதி - புண்ணிலிருந்து கொட்டும் குருதி, முகம் பாய்ந்து - முகத்தில் பரவி, இழிதர - கீழே வடிய, புள்ளி வரி - புள்ளியும் வரியும், நுதல் சிதைய - நெற்றி அழிய, நில்லாது - நிற்காது, அயர்ந்து - தன்னை மறந்து, புறங்கொடுத்த பின்னர் - புறமுதுகிட்டு ஓடிய பின்னர், நெடுவேள் அணங்கு உறு மகளிர் - முருகன் தீண்டி வருத்தமுற்ற பெண்கள், ஆடு களம் கடுப்ப - வெறியாட்டு களத்தைப் போன்று
துணையறை மாலையின், கை பிணி விடேஎம்,
நுரையுடைக் கலுழி பாய்தலின் உரவுத் திரை
அடுங் கரை வாழையின் நடுங்கப் பெருந்தகை,
“அஞ்சில் ஓதி! அசையல்! யாவதும் . . . .[180]
அஞ்சல், ஓம்பு நின் அணி நலம் நுகர்கு” என
மாசு அறு சுடர் நுதல் நீவி, நீடு நினைந்து,
என் முகம் நோக்கி நக்கனன்.......... . . . .[169 - 183)
துணையறை மாலையிற் கைபிணி விடேஎ
நுரையுடைக் கலுழி பாய்தலி னுரவுத்திரை
யடுங்கரை வாழையி னடுங்கப் பெருந்தகை
யஞ்சி லோதி யசையல் யாவது . . . .[180]
மஞ்ச லோம்புநின் னணிநல நுகர்கென
மாசறு சுடர்நுத னீவி நீடுநினைந்
தென்முக நோக்கி நக்கன னந்நிலை
பொருளுரை:
திண்மையான கடம்ப மரத்தின் திரண்ட அடிப்பகுதியில் வளையச் சூட்டிய மகளிர் ஒழுங்குக்கு ஒப்புச் சாற்றுதலையுடைய மாலையைப் போன்று, நாங்கள் எங்கள் கோத்த கைகளை விடவில்லை. நுரையையுடைய புது வெள்ளம் பாய்ந்ததால் வலிமையான அலைகள் கரையை இடிக்கும்பொழுது நடுங்கும் வாழை மரத்தைப் போல் நடுங்கினோம் நாங்கள். பெரிய தலைவன், “அழகிய மென்மையான கூந்தலை உடையவளே! தடுமாறாதே! அச்சம் கொள்ளாதே! உன்னுடைய அழகிய நலத்தை நுகர்வேன் நான்” என, மாசு இல்லாத தலைவியின் ஒளியுடைய நெற்றியைத் தடவி, அதன் பின் நீண்ட நேரமாக நினைத்து, தலைவியின் தோழியான என்னுடைய முகத்தை நோக்கி நகைத்தான்.
குறிப்பு:
துணை அறை மாலை (177) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - மகளிர் ஒழுங்குக்கு ஒப்புச் சாற்றுதலையுடைய மாலையைப் போன்று, ‘கடம்பினை முருகனாகக் கருதி மாலை சூடுதல் மரபு’.
சொற்பொருள்:
திணி நிலைக் கடம்பின் - திண்மையான கடம்ப மரத்தின், திரள் அரை - திரண்ட அடிப்பகுதி, வளைஇய - வளைந்த, துணை அறை மாலையின் - மகளிர் ஒழுங்குக்கு ஒப்புச் சாற்றுதலையுடைய மாலையைப் போன்று, கை பிணி விடேஎம் - நாங்கள் கோத்த கைகளை விடவில்லை, நுரையுடைக் கலுழி பாய்தலின் - நுரையையுடைய புது வெள்ளம் பாய்ந்ததால், உரவுத்திரை - வலிமையான அலைகள், அடுங் கரை - கரையை இடிக்கும், வாழையின் நடுங்க - வாழை மரத்தைப் போல் நடுங்கி, பெருந்தகை - பெரிய தலைவன், அஞ்சில் ஓதி - அழகிய மென்மையான மயிர், அசையல் - தடுமாறாதே, யாவதும் அஞ்சல் ஓம்பு - அச்சம் கொள்ளாதே, நின் அணி நலம் - உன்னுடைய அழகிய நலம், நுகர்கு என - நுகர்வேன் என, மாசு அறு - மாசு இல்லாத, சுடர் நுதல் - ஒளியுடைய நெற்றி, நீவி - தடவி, நீடு நினைந்த - நீண்ட நேரமாக நினைத்து, என் முகம் நோக்கி நக்கனன் - என்னுடைய முகத்தை நோக்கி நகைத்தான்