குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு

நாய்களை அடக்கிக் கெடுதி வினவிய தலைவன்
பாடல் வரிகள்:- 135 - 142
ஆ காண் விடையின், அணி பெற வந்து எம்
அலமரல் ஆயிடை வெரூஉதல் அஞ்சி,
மெல்லிய இனிய மேவரக் கிளந்து எம்
ஐம்பால் ஆய் கவின் ஏத்தி, “ஒண் தொடி
அசைமென் சாயல் அவ்வாங்கு உந்தி . . . .[140]
மட மதர் மழைக் கண் இளையீர்! இறந்த
கெடுதியும் உடையேன்” என்றனன்........... . . . .[135 - 142]
தாகாண் விடையி னணிபெற வந்தெ
மலமர லாயிடை வெரூஉத லஞ்சி
மெல்லிய வினிய மேவரக் கிளந்தெ
மைம்பா லாய்கவி னேத்தி யொண்டொடி
யசைமென் சாய லவ்வாங் குந்தி . . . .[140]
மடமதர் மழைக்க ணிளையீ ரிறந்த
கெடுதியு முடையே னென்றன னதனெதிர்
பொருளுரை:
தனக்குப் பகையாகிய பிற காளைகளை விரட்டிய, செருக்கு மிக்க, வேறு நிலத்துப் பசுக்களைக் கண்ட காளையைப் போல, அழகுடன் வந்து, நாங்கள் மனக் கலக்கம் அடைந்த வேளையில், நாங்கள் அஞ்சுவதைக் கண்டு தானும் அஞ்சி, எங்களிடம் மென்மையான இனிமையான சொற்களைப் பொருந்துமாறு கூறி, எங்களுடைய ஐந்து பிரிவாகிய கூந்தலையும், எங்களின் பலரால் ஆராயப்பட்ட அழகையும் புகழ்ந்து, “ஒளியுடைய வளையல்களையும், அசையும் மென்மையான சாயலையும், அழகிய வளைந்த கொப்பூழினையும், மடமையுடைய ஈர கண்களையுமுடைய இளையவர்களே! நான் வேட்டையாடிய விலங்கு தப்பிப் போன நிலையில் உள்ளேன்”.
சொற்பொருள்:
மாறு பொருது ஓட்டிய - பகைவரை விரட்டிய, புகல்வின் - செருக்கு மிக்க, வேறு புலத்து - வேறு நிலத்து, ஆ காண் விடையின் - பசுக்களைக் கண்ட காளையைப் போல (விடையின் - இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), அணி பெற வந்து - அழகுடன் வந்து, எம் அலமரல் - எங்கள் மனக் கலக்கம், ஆயிடை - அவ்வேளையில், வெரூஉதல் - நாங்கள் அஞ்சுவதற்கு (இன்னிசை அளபெடை), அஞ்சி - அவன் அஞ்சி, மெல்லிய இனிய - மென்மையான இனிமையான, மேவரக் கிளந்து - பொருந்துமாறு கூறி, எம் ஐம்பால் - எங்களுடைய ஐந்து பிரிவாகிய கூந்தல், ஆய் கவின் - ஆராய்ந்த அழகு, நுண்மையான அழகு, ஏத்தி - புகழ்ந்து, ஒண் தொடி - ஒளியுடைய வளையல்கள், அசை - அசைகின்ற, மென் சாயல் - மென்மையான சாயல், அவ்வாங்கு உந்தி - அழகிய வளைந்த கொப்பூழ், மடமதர் மழைக்கண் - மடமையுடைய ஈர கண்கள், இளையீர் - இளையவர்களே, இறந்த - தப்பிப் போன, கெடுதியும் - நான் வேட்டையாடிய விலங்கு, உடையேன் - உடையேனாக உள்ளேன்