குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு


வந்தன நாய்கள்

பாடல் வரிகள்:- 128 - 134

முனை பாழ்படுக்கும் துன்னருந் துப்பின்,
பகை புறங் கண்ட பல்வேல் இளைஞரின்,
உரவுச்சினம் செருக்கித் துன்னுதொறும் வெகுளும் . . . .[130]

முளை வாள் எயிற்ற வள் உகிர் ஞமலி,
திளையாக் கண்ண வளைகுபு நெரிதர,
நடுங்குவனம், எழுந்து நல்லடி தளர்ந்து யாம்
இடும்பை கூர் மனத்தேம், மருண்டு புலம் படர, . . . .[128 - 134]

பொருளுரை:

பகைப் புலத்தைப் பாழ்படுத்தும், நெருங்க முடியாத வலிமையுடன், பகைவர்கள் புறமுதுகிட்டு ஓடுவதைக் கண்ட வேற்படையை உடைய இளைய மறவர்களைப் போன்று மிகுந்த சினத்தால் செருக்குற்று, நெருங்கும்தோறும் சினக்கும் மூங்கில் முளையைப் போன்ற ஒளியுடைய பற்களையும் கூர்மையான நகங்களையும் உடைய நாய்கள், இமைக்காத கண்களுடன் எங்களைச் சுற்றி வளைத்து நெருங்க, நாங்கள் நடுங்கினோம். எழுந்து, அடி தளர்ந்து, நாங்கள் வருத்தம் மிக்க நெஞ்சுடையவர்களாக மருண்டு, இடத்தைவிட்டுச் செல்ல,

சொற்பொருள்:

முனை பாழ்படுக்கும் - பகைப் புலத்தைப் பாழ்படுத்தும், துன் அரும் துப்பின் - நெருங்க முடியாத வலிமையுடன், பகைப் புறம் கண்ட - பகைவர்கள் புறமுதுகிட்டு ஓடுவதைக் கண்ட, பல் வேல் இளைஞரின் - வேற்படையை உடைய இளைய மறவர்களைப் போன்று (இளைஞரின் - இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), உரவுச்சினம் செருக்கி - மிகுந்த சினத்தால் செருக்குற்று, துன்னுதொறும் - நெருங்கும்தோறும், வெகுளும் - சினக்கும், முளை வாள் எயிற்ற - மூங்கில் முளையைப் போன்ற ஒளியுடைய பற்களுடன், வள் உகிர் - கூர்மையான நகங்கள், ஞமலி - நாய்கள், திளையாக் கண்ண - இமைக்காத கண்கள், வளைகுபு - வளைத்து, நெரிதர - நெருங்க, நடுங்குவனம் - நடுங்கினோம், எழுந்து - எழுந்து, நல்லடி தளர்ந்து - அடி தளர்ந்து, யாம் இடும்பை கூர் மனத்தேம் - நாங்கள் வருத்தம் மிக்க நெஞ்சுடையேமாக, மருண்டு - மருண்டு, புலம் படர - இடத்தைவிட்டு செல்ல