குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு

மர நிழலில் தங்கிய மங்கையர்
பாடல் வரிகள்:- 099 - 106
வள் உயிர் தெள் விளி இடை இடைப் பயிற்றிக் . . . .[100]
கிள்ளை ஓப்பியும், கிளை இதழ் பறியாப்
பை விரி அல்குல் கொய் தழை தைஇப்
பல் வேறு உருவின் வனப்பு அமை கோதை எம்
மெல் இரு முச்சிக் கவின் பெறக் கட்டி,
எரி அவிர் உருவின் அம் குழைச் செயலைத் . . . .[105]
தாது படு தண்ணிழல் இருந்தனம் ஆக, . . . .[99 - 106]
வள்ளுயிர்த் தெள்விளி யிடையிடைப் பயிற்றிக் . . . .[100]
கிள்ளை யோப்பியுங் கிளையிதழ் பறியாப்
பைவிரி யல்குற் கொய்தழை தைஇப்
பல்வே றுருவின் வனப்பமை கோதையெம்
மெல்லிரு முச்சிக் கவின்பெறக் கட்டி
யெரியவி ருருவி னங்குழைச் செயலைத் . . . .[105]
தாதுபடு தண்ணிழ லிருந்தன மாக
பொருளுரை:
பறவைகள் ஒலியாகிய இசைக்கருவிகளை உடைய, குறுக்கிட்டுக் கிடக்கும் மலைச் சரிவில், பெரிய ஒலியுடன் தெளிந்த சொற்களை இடையிடையே கூறி, கிளிகளை விரட்டியும், புற இதழ்களைக் களைந்து, பாம்பின் படத்தைப் போன்று படர்ந்த அல்குலில், கொய்த தழையினால் செய்த ஆடையைக் கட்டி, பல்வேறு உருவங்களில் அழகான மலர்மாலைகளை எங்களுடைய மெல்லிய கரிய கொண்டையில் அழகாகக் கட்டி, நெருப்பைப் போல உள்ள நிறத்தையுடைய அழகிய தளிரையுடைய அசோக மர மலர்த் தாது விழுகின்ற, குளிர்ச்சியான நிழலில் இருந்தோம்.
குறிப்பு:
கலித்தொகை 125 - தட அரவு அல்குல், நற்றிணை 366 - அரவுக் கிளர்ந்தன்ன விரவுறு பல் காழ் வீடுறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும் திருந்து இழை அல்குல். பை (102) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - பாம்பின் படம். இஃது அல்குலுக்கு உவமை. பறியா - பறித்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.
சொற்பொருள்:
புள் ஆர் இயத்த - பறவைகள் ஒலியாகிய இசைக்கருவிகளை உடைய, விலங்கு மலை - குறுக்கிட்டுக் கிடக்கும் மலை, சிலம்பின் - மலையின், வள் உயிர் - பெரிய ஒலி, தெள் விளி - தெளிந்த சொற்கள், இடை இடைப் பயிற்றி - இடையிடையே கூறி, கிள்ளை ஓப்பியும் - கிளிகளை விரட்டியும், கிளை இதழ் பறியா - புற இதழ்களைக் களைந்து, பைவிரி அல்குல் - பாம்பின் படத்தைப் போன்று படர்ந்த அல்குல், கொய் தழை - கொய்த தழை, தைஇ - கட்டி, பல் வேறு உருவின் - பல்வேறு உருவங்களில், வனப்பு அமை கோதை - அழகான மலர்மாலை, எம் மெல் இரு முச்சி - எங்களுடைய மெல்லிய கரிய கொண்டையில், கவின் பெறக் கட்டி - அழகாக கட்டி, எரி அவிர் உருவின் - நெருப்பைப் போல உள்ள நிறத்தையுடைய, அம் குழை - அழகிய தளிர், செயலை - அசோக மரம், தாது - மலரின் தாது, படு - விழுகின்ற, தண்ணிழல் இருந்தனம் ஆக - குளிர்ச்சியான நிழலில் இருந்தோம்