குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு

அருவியில் ஆடிய அரிவையர்
பாடல் வரிகள்:- 054 - 061
அவிர் துகில் புரையும் அவ்வெள் அருவி, . . . .[55]
தவிர்வு இல் வேட்கையேம் தண்டாது ஆடிப்
பளிங்கு சொரிவு அன்ன பாய் சுனை குடைவுழி,
நளி படு சிலம்பில் பாயம் பாடிப்
பொன் எறி மணியின் சிறுபுறம் தாழ்ந்த எம்
பின்னிருங் கூந்தல் பிழிவனம் துவரி, . . . .[60]
உள்ளகம் சிவந்த கண்ணேம்........ . . . .[54 - 61]
ரவிர்துகில் புரையு மவ்வெள் ளருவித் . . . .[55]
தவிர்வில் வேட்கையேந் தண்டா தாடிப்
பளிங்குசொரி வன்ன பாய்சுனை குடைவுழி
நளிபடு சிலம்பிற் பாயம் பாடிப்
பொன்னெறி மணியிற் சிறுபுறந் தாழ்ந்தவெம்
பின்னிருங் கூந்தல் பிழிவனந் துவரி . . . .[60]
யுள்ளகஞ் சிவந்த கண்ணேம் வள்ளித
பொருளுரை:
தலைவனின் நெடிய மலை உச்சியிலிருந்து விழுகின்ற தெளிந்த நீரையுடைய, விளங்குகின்ற, துணியைப் போன்ற அழகிய வெள்ளை அருவியில், நீங்குதல் இல்லாத விருப்பமுடையவர்களாக ஒழிவின்றி விளையாடி, பளிங்கினைக் கரைத்து சொரிந்தாற்போன்ற அகன்ற சுனையில் குடைந்து விளையாடும் இடத்தே, அடர்ந்த மலையில், எங்கள் மனதுக்கு ஏற்றாற்போல் பாடி, பொன்னில் பதிக்கப்பட்ட நீலமணியைப் போல, எங்கள் சிறிய முதுகில் தாழ்ந்து கிடந்த பின்னப்பட்ட கூந்தலைப் பிழிந்து உலர்த்தினோம். உள்ளிடம் சிவந்த கண்களுடையவர்களாக ஆனோம்.
குறிப்பு:
பாயம் (58) - குறிஞ்சிப்பாட்டு 342 - பொ. வே. சோமசுந்தரனார் உரை - மனவிருப்பம், பாசம் என்னும் வடமொழி பாயம் என்று நின்றது.
சொற்பொருள்:
அண்ணல் நெடுங்கோட்டு - தலைவனின் நெடிய மலை உச்சியிலிருந்து, இழிதரு - விழுகின்ற, தெள் நீர் - தெளிந்த நீர், அவிர் துகில் - விளங்குகின்ற துணி, ஒளியுடைய துணி, புரையும் - போல, அவ்வெள் அருவி - அழகிய வெள்ளை அருவி, தவிர்வு இல் - நீங்குதல் இல்லாத, வேட்கையேம் - விருப்பமுடையோமாய், தண்டாது - ஒழிவின்றி, ஆடி - விளையாடி, பளிங்கு சொரிவு அன்ன - பளிங்கினைக் கரைத்து சொரிந்தாற்போல், பாய் சுனை - அகன்ற சுனை, அகன்ற குளம், குடைவுழி - குடைந்து விளையாடும் இடத்தே (குடைவுழி = குடைவு + உழி, உழி = ஏழாம் வேற்றுமை உருபு), நளி படு சிலம்பில் - அடர்ந்த மலையில், பாயம் பாடி - மனதுக்கு ஏற்றாற்போல் பாடி, பொன் எறி மணியின் - பொன்னில் பதிக்கப்பட்ட நீல மணி போல, சிறுபுறம் தாழ்ந்த - சிறிய முதுகில் தாழ்ந்து கிடந்த, எம் பின்னிருங் கூந்தல் - எங்களுடைய பின்னப்பட்ட கூந்தல், பிழிவனம் - பிழிந்தோம், துவரி - உலர்த்தி, உள்ளகம் சிவந்த கண்ணேம் - உள்ளிடம் சிவந்த கண்களுடையவர்களாக ஆனோம்