குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு


பறவை ஓட்டும் பாவையர்

பாடல் வரிகள்:- 040 - 045

கலி கெழு மர மிசைச் சேணோன் இழைத்த . . . .[40]

புலி அஞ்சு இதணம் ஏறி, அவண்,
சாரல் சூரல் தகை பெற வலந்த
தழலும், தட்டையும், குளிறும், பிறவும்,
கிளி கடி மரபின ஊழ் ஊழ் வாங்கி,
உரவுக் கதிர் தெறூஉம் உருப்பு அவிர் அமயத்து, . . . .[40 - 45]

பொருளுரை:

ஆரவாரம் மிகுந்த மரத்தின் உச்சியில், தினைப் புனத்தின் காவலாளி, புலியின் மேல் கொண்ட அச்சத்தினால் செய்த பரணில் ஏறி, அங்கு மலைச் சரிவில் உள்ள பிரம்பினால் அழகாகப் பின்னிய தழல் என்ற கருவியையும், தட்டை என்ற கருவியையும், குளிர் என்ற கருவியையும், பிறவற்றையும், கிளியை ஓட்டும் முறைப்படி முறை முறையாகக் கையில் கொண்டு, ஞாயிற்றின் மிகுந்த கதிர்கள் சுடும் வெட்பத்துடன் அமைந்த ஒளியுடைய வேளையில்,

குறிப்பு:

தழல் என்பது கையால் சுற்றும்பொழுது ஒலியை எழுப்பும் கருவி, தட்டை - மூங்கிலைப் பிளந்து தட்டி ஒலி எழுப்பும் கருவி, குளிர் - மூங்கிலை வீணையைப் போல கட்டித் தெறித்து ஒலி எழுப்பும் கருவி.

சொற்பொருள்:

கலி கெழு - ஆரவாரம் மிகுந்த, மர மிசை சேணோன் இழைத்த - மரத்தின் உச்சியில் புனத்தில் பரணில் இருக்கும் காவலாளி செய்த, புலி அஞ்சு இதணம் - புலியை அஞ்சுவதற்கு காரணமான பரண், புலி அஞ்சும் பரண், ஏறி - ஏறி, அவண் - அங்கு, சாரல் - மலைச் சரிவு, சூரல் - பிரம்பு, தகை பெற - அழகாக, வலந்த - பின்னிய, தழலும் - தழல் என்ற கருவியையும், தட்டையும் - தட்டை என்ற கருவியையும், குளிறும் - குளிர் என்ற கருவியையும், பிறவும் - பிறவற்றையும், கிளி கடி மரபின - கிளியை ஓட்டும் முறைப்படி (மரபின - பலவின்பாற் பெயர்), ஊழ் ஊழ் - முறை முறையாக, வாங்கி - கையில் கொண்டு, உரவுக் கதிர் - ஞாயிற்றின் மிகுந்த கதிர்கள், தெறூஉம் - சுடும் (இன்னிசை அளபெடை), உருப்பு - வெட்பம், அவிர் அமயத்து - ஒளியுடைய வேளையில்